Thursday, September 25, 2014

நானொரு விளையாட்டு பொம்மையா?

நானொரு விளையாட்டு பொம்மையா?

நானொரு விளையாட்டு பொம்மையா 
என்ற இந்த பாடலை பாடாத 
கர்நாடக இசைக் கலைஞர்களோ 
கேட்காத  ரசிகர்களோ இருக்க முடியாது 




தேவி மீது  நவரச கன்னட ராகத்தில் அமைந்துள்ள 
இந்த கீர்த்தனையை இயற்றியவர் 
பாபநாசம் சிவம் அவர்கள். 

பாடுபவர்களும் தாங்கள் பட்ட  ஏதாவதொரு 
துன்பத்தை நினைத்துக்கொண்டு 
அந்த கீர்த்தனையை உயிரோட்டமாக 
பாடி ரசிகர்களை ஆட்டி வைப்பார்கள். 

அவர் ஏராளமான கீர்த்தனைகளை 
தமிழில் இசை உலகத்திற்கும் 
திரைப்படங்களுக்கும் 
இயற்றி தந்துள்ளார். 

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் 
எவ்வளவு திறமைகள் வாய்த்திருந்தாலும் 
ஏதாவது ஒரு பிணியினால் அவதிபட்டுதான் 
ஆக  வேண்டும் என்பது கர்ம விதி 

அதுபோல் ஆஸ்துமா நோயினால் பாபநாசம் சிவன் அவதிபட்டார் 
இருந்தாலும் ஆத்மாவை பீடித்துள்ள அஞ்ஞானம் என்னும் 
பிணியை நீக்க கடும் பனியிலும் மார்கழி மாத பஜனையில் 
கலந்துகொண்டு பாடல்களை பாடுவாராம். 

எனவே துன்பப்பட்ட பாபநாசம் சிவன் தேவியை நோக்கி நான் 
ஒரு விளையாட்டு பொம்மையா என்று பாடியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் பரமசிவனே பாபநாசம் சிவன் மூலமாக இந்த கீர்த்தனையைப் பாடியிருப்பானோ என்று தோன்றுகிறது.

எப்படி என்றால் சிவபெருமான் பார்வதியைக் கைபிடித்ததிலிருந்து 
பட்ட துன்பங்களை நாம் நோக்கினால் இந்த உண்மை புரியும்.

இருந்தாலும் துன்பங்களை தரும் தேவி நம்முடைய நன்மைக்காகத்தான் 
அவைகளை தருகிறாள் என்பதே உண்மை. அவள் தரும் இன்பங்கள் கோடி கோடி .அதனால் அவள் தரும் துன்பங்களைப் பொருட்படுத்தாமல் 
அவள் நமக்கு தந்துள்ள நன்மைகளைக் கருதி அவளை பூஜிக்கிறோம். 

நம்மை  விளையாட்டு பொம்மைகளாய் ஆட்டி வைக்கும் தேவியை   
நாமும் அவள் வடிவங்களை பொம்மைகளாக்கி பூஜை செய்து மகிழும் 
நாளே நவராத்திரி என்றால் மிகையாது. 




இந்த ஒன்பது நாட்களும் அனைவரின் வாழ்விலும் இன்பமும் மகிழ்ச்சியும் 
பெருகி ஆண்டு முழுவதும் நிலைத்து நிற்கட்டும். 

பாடல் இணைப்பு:
https://www.youtube.com/watch?v=kONiLaz2Z5M

1 comment:

  1. பிடித்த பாடல். முன்பு டி கே பட்டம்மாள் குரலில் கேட்டது. இப்போது சிக்கில் குருசரண் குரலில் பாடலைக் கேட்டு ரசிக்கிறேன்.

    ReplyDelete