Thursday, October 16, 2014

பரமனை அடையும் வழி ஒன்றே

பரமனை அடையும் வழி ஒன்றே

வானில் உயரே
பறக்க வழியிருந்தும் நல்ல உணவை
உண்ணாது பூமியில்



அழுகிய பிணத்தை தேடி வயிறு
வளர்க்கும் பருந்து போன்ற பறவைகள்



அதுபோல் இவ்வுலகில் மனிதர்கள் பலர்
வாழ்வில் நல்ல உயர்ந்த
நிலையை அடைந்த பின்னும்
அழியும் அற்ப பொருட்களையே நாடி தேடி ஓடி
அழிந்து போகின்றனர்

பூலோகனாதனை நினைந்து ,பணிந்து
உய்யும் வழியை நாடாது



தீயில் உருகி
காணாமல் போகும் உலோகங்களை
உடலில் அணிந்து உலா வருகின்றனர்.



நம் கண் முன்னே தோன்றி நாம் போடும்
உணவை உண்டு கொழுத்து நோயுற்று
நம் கண்முன்னே மண்ணுக்கு போகும்
உடலை நம்பி மோசம் போகின்றனர்



நம்மைப் படைத்தது மட்டுமல்லாமல்
நம் உடலுக்குள்ளே கோயில் கொண்டு
நம்மை இயக்கும்  உத்தமனை அறிய
முயலாது ஏதேதோ பிதற்றி திரிகின்றனர்
இவ்வுலக மாந்தர்.

ஓராயிரம் நாமங்கள் கொண்ட   அவன்தான்
இறைவன் என்று  உண்மையை
அவனை உணர்ந்தோர் உரக்கக் கூறிடினும்
தான் வணங்கும் வடிவமே உண்மையான
தெய்வம் என்று  உரிமை கொண்டாடி
உலகத்தில் குழப்பம் விளைவிக்கிறது
உண்மையை உணராக் கூட்டம்


படித்தவருக்கும் பாமரனுக்கும்
பரமனை அடையும் வழி ஒன்றே



அவன் பாதங்களைச் சரணடைந்து
அவன் நாமம் சொல்லி அனைத்து
உயிர்களுடன் அன்போடு இணைந்து
வாழ்வதே அவனை அடையும்
எளிதான  வழி என்பதை அவனைக்
கண்டவர்கள் காட்டிய வழி.

படங்கள்-நன்றி-கூகுள்



3 comments:

  1. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி உள்ளத்தில் ஒளி உண்டாகட்டும்

      Delete