Monday, January 19, 2015

மூலத்தை தேடி ?(1)

மூலத்தை தேடி ?(1)

ஆம் இந்த அண்டத்தில் உள்ள அனைத்து
உயிர்களும் ஒரு மூலப் பொருளிருந்துதான்
வெளிவந்துள்ளன

அது வெளி வந்தவுடன் அது தங்குவதற்கு  ஒரு உடலை
அந்த மூலப் பொருளே அமைத்து தருகிறது

அமைத்து தருவது மட்டுமல்லாமல்
அந்த உயிருக்குள் அதை
இயக்கும்   சக்தியாக உள்ளே புகுந்து கொள்கிறது

தன்னுள்ளே புகுந்து கொண்ட சக்தியை அறிந்து கொள்ளும் அறிவு
அபோது அந்த உயிருக்கு கிடையாது

அந்த கணத்திலிருந்து அந்த உயிர் தொடங்கியது
முடிவை நோக்கி முடிவில்லா பயணம்

அந்த உடலை சுடலையில் இடும் வரை
அது கூடுகளை மாற்றிக்கொண்டே இருக்கிறது.

அந்த உடலை பராமரித்து பராமரித்து
பாதுகாத்தும் அது மரித்துப் போய்விடுகிறது

பிறகு செல்லரித்து போய்விடுகிறது

ஒருயிராய் தொடங்கிய பயணம் தன் பாதையில்
வரும் மற்ற உயிரினங்களோடு சேர்ந்துகொண்டு
பயணத்தை தொடர்கிறது .

ஆனால் எதுவும் அந்த உயிரோடு இறுதிவரை
வருவதில்லை.

இருந்தும் அது  அவ்வபோது பல புதிய உயிர்களை
தன்னோடு இணைத்துக்கொண்டு பயணத்தை தொடர்கிறது.

ஒரு உயிர் ஒரு கூட்டிற்குள் நுழைவதை பிறப்பு என்றும்
அதை விட்டு வெளியேறுவதை இறப்பு என்றும் கூறுகிறோம்.

இப்படியாக பிறப்பிலிருந்து இறப்பை நோக்கி செல்லும்
பயணத்தை வாழ்க்கை என்கிறோம்.

வாழ்க்கையில் பலவிதமான இன்ப துன்ப, இழப்பு
போன்ற அனுபவங்களைப் பெறுகின்றோம்.

இப்படி சங்கிலித் தொடர் போன்ற நிகழ்வுகளில் சிக்கிவிட்ட
உயிர் தான் யார் என்பதையே மறந்துவிடுகிறது .

தான்  வசிக்கும் உடலே தான் என்று எண்ணத் தொடங்கி
தன், எண்ணம், சொல். செயல் அனைத்தையும் அந்த
உடலைச் சுற்றியே அமைத்துக்கொள்ளுகிறது.

இன்னும் வரும்


1 comment: