Monday, December 14, 2015

குருவாயுரப்பனே நமோ நமோ !

குருவாயுரப்பனே நமோ நமோ !


குருவாயுரப்பனே நமோ நமோ
குழந்தை வடிவில் காட்சி தரும்
தெய்வமே நமோ நமோ (குருவாயுரப்பனே)



குவலயத்தைக்  காக்கவே
கோகுலத்தில் அவதரித்தாய்
ஏதுமறியாஆயர் சிறுவர்களிடம்
இணையில்லா லீலைகள் புரிந்தாய்

அன்னை யசோதையின் அன்பில் கரைந்தாய்
கள்ளமில்லா கோபியருடன் களிநடனம்
புரிந்து மகிழ்ந்தாய்.  (குருவாயுரப்பனே)

அகந்தை கொண்டு அதர்ம நெறியில்
நின்ற  கூட்டத்தை அழித்தாய்
அவனியில் மாந்தர்களின் அறியாமை
அகல  கீதையளித்து அருள் செய்தாய்  (குருவாயுரப்பனே)

எண்ண எண்ண  இனிக்கும் உந்தன்  நாமம்
இக பர சுகங்களை அளிக்கும் நாமம்
இன்னலை போக்கி இன்பம் அருளும்  நாமம்
இறுதியில் முக்தி அளிக்கும் உந்தன்
நாமம்  (குருவாயுரப்பனே)

No comments:

Post a Comment