Tuesday, December 29, 2015

உண்மைப் பொருளாய் விளங்கிடும் தெய்வமே !

உண்மைப் பொருளாய் விளங்கிடும் தெய்வமே !





Metal foil-Art- by T.R.Pattabiraman 

உள்ளம் என்னும் கோயிலே
ஒளியாய் மறைந்து நின்று ஒளி
வீசும் உப்பிலியப்ப பெருமானே

ஒருமையுடன் உன்னை நினைந்து
வணங்குகின்றோம் உலகத்து
உயிர்கள் யாவும் இன்புற்று வாழவே (உள்ளம்)

கருணை பொழியும்
கண்களை உடையவனே
காம க்ரோதாதிகளைக் களைந்து
இவ்வுலகில் உழலும்  காலம் முழுதும்
களிப்புடன் வாழ அருள் செய்வாய் (உள்ளம்)

உண்மைப் பொருளாய்
விளங்கிடும் தெய்வமே
பக்தி என்னும் உணர்வினால் மட்டும்
அடைய இயலும் பரந்தாமனே  (பக்தி)(உண்மை)

அன்புடனே கூடி
அகிலத்து மாந்தர்
ஆனந்தம் பெற்று
அமைதியாகவே வாழ (உண்மைப்)(உள்ளம்)

No comments:

Post a Comment