கோதையே என் அன்னையே
நீ வாழி வாழி வாழி

பக்தியில் தோய்ந்து
பரமனிடம் கலந்து நிற்கும் பாவையே
பெரியாழ்வார் கண்டெடுத்த கோதையே
உந்தன் பெருமை பேசுதல் எளிதாமோ
நிலையில்லா மனம் கொண்டு
நிமலனை மறந்து நிம்மதியின்றி
தவித்த என் போன்றோருக்கு
திருமால் புகழ் பாடும்
திருப்பாவை தந்தாய்
திருஆயர்பாடி கண்ணனை நினைந்துருகி
அவன் திருவுள்ளம் கவர்ந்தாய் (பக்தி)
மாலவன் மாதமாம் மார்கழி தன்னில்
அவன் மலர்ப்பதம் நினைந்து வணங்கி
மகிழ்ந்து உலக மாயை நீங்க வழி காட்டி
அருளிய கோதையே என் அன்னையே
நீ வாழி வாழி வாழி
நீ வாழி வாழி வாழி
பக்தியில் தோய்ந்து
பரமனிடம் கலந்து நிற்கும் பாவையே
பெரியாழ்வார் கண்டெடுத்த கோதையே
உந்தன் பெருமை பேசுதல் எளிதாமோ
நிலையில்லா மனம் கொண்டு
நிமலனை மறந்து நிம்மதியின்றி
தவித்த என் போன்றோருக்கு
திருமால் புகழ் பாடும்
திருப்பாவை தந்தாய்
திருஆயர்பாடி கண்ணனை நினைந்துருகி
அவன் திருவுள்ளம் கவர்ந்தாய் (பக்தி)
மாலவன் மாதமாம் மார்கழி தன்னில்
அவன் மலர்ப்பதம் நினைந்து வணங்கி
மகிழ்ந்து உலக மாயை நீங்க வழி காட்டி
அருளிய கோதையே என் அன்னையே
நீ வாழி வாழி வாழி
No comments:
Post a Comment