Wednesday, August 1, 2018

இசையும் நானும் (318)-திரைப்படம்-பாத காணிக்கை -1962 பாடல்::பூஜைக்குவந்த மலரே வா

இசையும் நானும் (318)-திரைப்படம்-பாத காணிக்கை     -1962

பாடல்::பூஜைக்குவந்த மலரே வா 

MOUTHORGAN VEDIO(318)

இசை- எம் .எஸ். விஸ்வநாதன் 

பாடல் வரிகள்-கண்ணதாசன்
பாடியவர்கள்- பி.பி.ஸ்ரீனிவாஸ் -எஸ். ஜானகி. 

56 ஆண்டுகளானாலும் வாடாது

மணம்  வீசும் வாடா மலர் 

பூஜைக்கு வந்த மலரே வா 
பூமிக்கு வந்த நிலவே வா 
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த 
பொன் வண்ணமேனி சிலையே வா 

மலர் கொள்ள வந்த தலைவா வா 
மனம் கொள்ள வந்த இறைவா வா 
கையோடு  கொண்டு தோளோடு சேர்த்து 
கண் மூட வந்த கலையே வா 

கோடைகாலத்தின்நிழலே நிழலே 
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா 
ஆடை கட்டிய ரதமே  ரதமே  
அருகில் அருகில் நான் வரவா 

அருகில் நின்றது உருகி நின்றது 
உறவு தந்தது முதல் இரவு 
இருவர் காணவும் ஒருவர் ஆகவும் 
இரவில் வந்தது பெண்ணிலவு (மலர்)

செக்கச் சிவந்த இதழோ  இதழோ 
பவளம் பவளம் செம்பவளம் 
தேனில் ஊறிய மொழியில் மொழியில் 
மலரும் மலரும் பூ மலரும் 

எண்ணி வந்தது கண்ணில் நின்றது 
என்னை வென்றது உன் முகமே 
இன்ப பூமியில் அன்பு மேடையில் 
என்றும் காதலர் காவியமே(மலர்)(பூஜைக்கு) 


No comments:

Post a Comment