Tuesday, August 14, 2018

இசையும் நானும் (321)-(முருகன் பாடல்கள்) பாடல்::ஓராறு முகமும் ஈராறு கரமும்

இசையும் நானும் (321)-(முருகன் பாடல்கள்) பாடல்::ஓராறு முகமும் ஈராறு கரமும்

MOUTHORGAN VEDIO(321) 

 பாடல் வரிகள்-வாலி 
பாடியவர்-- டி .எம் .சவுந்தரராஜன் 



ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும் - ஐயன்

(ஓராறு)

ஆராவமுதென அருள்மழை பெய்யும்
கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும்

(ஓராறு)

சுவாமி மலையில் சிவகுருவென்று திரு
சீரலைவாயிலில் சூரனை வென்று
தேமதுர மொழியாள் தேவானையை மணந்து
திருப்பரங்குன்றினில் தரிசனம் தந்த - அந்த

(ஓராறு)

மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த
(ஓராறு)

Image courtesy-google-images 





No comments:

Post a Comment