Friday, August 17, 2018

சிந்திக்க சில செய்திகள்..

சிந்திக்க சில செய்திகள்..

ஆசைப்பட ஆசைப்பட ஆய்வரும்
துன்பம் என்கிறார் திருமூலர்.

ஓசையின்றி உயிர் போகும் முன்னே
ஆசைகளை விட்டொழிக்க பழகு.

கோமா நிலைக்கு செல்லும் முன்னரே
ராம நாமத்தை சொல்லி பழகு.

அழகு என்பது வடிவிலோ அல்லது
நிறத்திலோ இல்லை
அது காண்பவன் இதயத்தில் இருக்கிறது

உண்மை பேச மனம் தேவையில்லை
பொய் பேசத்தான் மனம் வேண்டும்.

உண்மை உடனே கொல்லும்
பொய் நாட்பட்ட தீராத நோய்களை
அளித்து வருத்தி  கொல்லும் .

உழைப்பு மட்டும் என்றும் உயர்வு தராது.
எந்த நோக்கத்திற்காக என்பதை பொறுத்துதான்
உயர்வையோ தாழ்வையோ தரும்.

கொடுத்துக்கொண்டே இருப்பவனிடம்
செல்வம் தங்குவதில்லை.

கொடுக்காத கருமியிடம்
செல்வம் தங்கும்

ஆனால் அந்த செல்வத்தை அனுபவிக்க
அவன் தங்குவதில்லை.

ஈரம் உள்ள  மண்ணில்தான்
பசுமையான புற்கள் முளைக்கும்

இதயத்தில் அன்பு  உள்ளவனின்
வாயிலிருந்துதான் அன்பான
சொற்கள் வெளிவரும். 

No comments:

Post a Comment