Monday, February 6, 2012

தாய் தந்தை உறவுகள் கசக்க காரணம் என்ன ?

பணம்தான் இன்றைய கால கட்டத்தின் 
மனிதர்களின் வாழ்க்கை இலக்கு
அதற்காகத்தான் கல்வி கற்கிறார்கள்
அதற்காக பெற்றோர்ர்களும் 
மற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு
வாழ்நாளில் பெரும்பகுதி தங்களை 
சுகங்களையும்,வாழ்வையும் இழக்கிறார்கள்
பெற்றோர்களின் உதிரத்திலிருந்து பிறந்த குழந்தைகள் 
அவர்களில் வியர்வையை தங்களுக்கு 
உரமாக்கி வளந்த குழந்தைகள் இன்று காட்டும்
நன்றிகடன் என்ன தெரியுமா?
தங்களை வளர்த்தவர்களை அப்படியே 
விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு பணம்
சம்பாதிக்க சென்றுவிடுகிறார்கள்
பெற்றோர்கள் நோய்வாய்பட்டாலும்
வந்து அருகில் கவனிப்பதில்லை 
தனிமையில் தவிக்கும் அவர்களின் இறுதி
நாட்களில் அவர்களை மதிப்பதும் இல்லை

பலர் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் 
தள்ளிவிட்டுவிடுகின்றனர்
பலர் பெற்றோர்களை அனாதையாக 
விட்டு விடுகின்றனர்
சிலர் அவர்கள் பெறும் அரசு பென்ஷன்
காசுக்காக ஆதரிப்பதுபோல்நடிக்கின்றனர்
இப்படி முக்கியமாக தாய் தந்தை உறவுகள்
கசக்க காரணம் என்ன ?

பெற்றோர்களும் ஒருவகையில் காரணமாக 
இருப்பதுதான்
 .
அவர்கள் குழந்தைகளை இயந்திர கதியில் வளர்ப்பதும்
அவர்களுக்கு உண்மையான அன்பை போதிக்காதும்தாம்
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக 
இருக்க போதித்து அதற்காக அவர்களை பலவகையில்
துன்புறுத்தி அவர்கள் மட்டும் பலவகைகளில் ஒழுங்கீனமான
வாழ்க்கை நடத்தியதும்தான்

மாத பிதா குரு தெய்வம் என்ற வரிசையில் வைத்து 
போற்றி வணங்க வேண்டிய பெற்றோர்கள் 
இன்று மனம் வெதும்பி துன்புறுவதர்க்கு  காரணம்
அவர்கள் தங்கள் குழந்தைகளை பணத்தை எப்படி
சம்பாதிப்பது என்றும் எப்படி வளமாக வாழ்வது என்று 
அவர்களை உருவாக்கியிருக்கிரார்களே தவிர 
அன்பு, பண்பு பாசம், நேர்மை,இரக்கம்,இறை பக்தி, 
போன்றவற்றையும் ஊட்டி வளர்த்திருந்தார்களேயானால்
 இன்று இதுபோல் அல்லல்பட வேண்டிய 
நிலை அவர்களுக்கு வந்திருக்காது 

2 comments:

  1. பல உண்மைகளை சொல்லி உள்ளீர்கள் ! நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  2. நன்றி நண்பரே
    இந்த பதிவு தடம் மாறிய உள்ளங்களில்
    மாற்றம் விளைவித்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete