Friday, February 17, 2012

உங்களுக்கு ஏன் மன நிம்மதி இல்லை?

உங்களுக்கு ஏன் மன நிம்மதி இல்லை?

ஏன் எனக்கு மன நிம்மதி இல்லாமல் போயிற்று?
நான் ஏன் மனசஞ்சலத்துடன் இருக்கின்றேன்?
என்னுடைய பிரச்சினைகள்தான் என்ன?

எனக்கு எல்லாம் இருக்கிறது.
இருந்தும்மனம்  எதையோ நினைத்து
கலங்குகிறது அல்லது பயப்படுகிறது
அல்லது கவலைப்படுகிறது

இந்நிலை மாறி எப்போது மனம் அமைதியாக
நிம்மதியாக இருக்கும் என்று இன்று
பல பேர் புலம்புகிறார்கள்

சிலர் வெளியே காட்டி கொள்கிறார்கள்
பலர் மனதிற்குள்ளேயே போட்டு
புழுங்கிகொண்டிருக்கிரார்கள்

எது எப்படி இருந்தாலும் அது அவர்களின் முகம்
அவர்கள் கவலைப்படுவதை காட்டிகொடுத்துவிடும்

இந்நிலை நீடித்தால் அது அவர்களின்
ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்
அவர்கள் வாழ்க்கையின்
மகிழ்ச்சியை பறித்துவிடும்

தொடர்ந்து அந்த நிலையிலிருந்து
மீளவில்லை என்றால்
மற்றவர்களிடமிருந்து
அவர்களை தனிமைபடுத்திவிடும்
மது,மற்றும் போதை பழக்கங்களுக்கு
ஆட்படுத்திவிட்டும்

முதலில் மனிதர்கள் தங்களின் இந்த நிலைக்கு
அவர்களேதான் காரணமாக உள்ளனர் என்பதை
உணர்ந்துகொள்ளவேண்டும்

அவர்களின் அறிவற்ற செயல்களே
அவர்களின் துன்பத்திற்கு
காரணமாகும் என்பதை
புரிந்துகொள்ளவேண்டும்

இந்த நிலையிலிருந்து மீள வேண்டுமேன்றால்
தனது மனதில் நல்ல எண்ணங்களை மட்டுமே
உருவாக்கி அவைகளை
உறுதியுடன் இருக்குமாறு
 பார்த்து கொள்ளவேண்டும்

எல்லையற்ற ஞானத்தின்  மூலமாக மனதில் நல்ல
ஒளியினை ஏற்ற வேண்டும்
ஞானத்தின் மூலாதாரத்தை
அடைந்துவிட்டால் அது பின்னர்
நல்ல தெளிவினை கொடுக்கும்

நல்ல ஆன்மீக நூல்களை படித்து
அதில் வழிகாட்டியுள்ளபடி
வாழ்க்கையில் கடைபிடிக்க
முயற்சி செய்ய வேண்டும்

உணவின்றி உடல் இருக்கலாம் .
ஆனால் அக உணவின்றி இருக்கலாகாது.

(சுவாமி சிதாநந்தரின் சிந்தனைகள்)




2 comments:

  1. "முதலில் மனிதர்கள் தங்களின் இந்த நிலைக்கு
    அவர்களே தான் காரணமாக உள்ளனர் என்பதை
    உணர்ந்து கொள்ள வேண்டும்."

    அருமையான வரிகள் சார் !

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும்
    நன்றி DD சார்

    ReplyDelete