Sunday, February 19, 2012

பாவம்தான் பக்தி

பயிற்சியே முக்கியம்

ஒருவன் ஆன்மீகத்தில் தொடர்ந்து இடைவிடாமல்
பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்
தொடர்ந்து பயிற்சி செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்
தேவைப்படுவதெல்லாம் இறைவனிடம்
 மாறாத அன்பு ஒன்றுதான்
இது இடையறாது இருக்கவேண்டும்

ஒரு சாதாரண வெள்ளை காகிதம்
அல்லது வர்ண காகித துண்டிற்கு
மதிப்பு கிடையாது ஆனால் அந்த
காகிதத்தின் மீது அரசாங்கத்தின்  முத்திரை
இருந்துவிட்டால் நீங்கள் அதை பத்திரமாக உங்களுடைய
பணபைய்யிலோ அல்லது இரும்பு பெட்டியிலேயோ
வைத்து கொள்ளுகிறீர்கள்
இதேபோல்தான் ஒரு கல்; துண்டுக்கும்
எந்தவித மதிப்பும் கிடையாது
நீங்கள் அதை எறிந்துவிடுகிறீர்கள்

ஆனால் நீங்கள் பண்டரிபுரதிலுள்ள
கிருஷ்ணா பரமாத்மாவின் கல் சிலையையோ
அல்லது கோயில்களிலுள்ள மூர்த்தியை
 பார்த்தால் கை கூப்பி வணங்குகிறீர்கள்
ஏனென்றால் அந்த கல்லின் மீது இறைவனின்
முத்திரை இருக்கிறது
பக்தன் அந்த கல் சிலை மீது தன்னுடைய அன்பிர்க்குரியவனையும்,அவனுடைய
எல்லா குணாதிசயங்களையும் காண்கின்றான்.

பாவம்தான் பக்தி 

நீங்கள் எதை நினைகின்றீர்களோ
அதுவாகவே ஆகிவிடுவீர்கள்
இறைவனின் நாமமும்
இறைவனின் வடிவமும்,
இறைவனும் அனைத்தும் ஒன்றே. 

2 comments:

  1. வித்தியாசமான கருத்துக்கள் ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும்
    நன்றி DD சார்

    ReplyDelete