Tuesday, February 21, 2012

கடவுளே மனிதகுலத்திற்கு வழிகாட்டு

கடவுளே மனிதகுலத்திற்கு வழிகாட்டு 

இந்த உலகையும் அதில் உள்ள
அனைத்து உயிர்களையும்
இறைவன்தான் படைத்தான்
படைத்தது மட்டுமல்லாமல்
அவைகளின் உள்ளே தான் ஆத்மாவாக
இருந்துகொண்டு அவைகளை
இயக்கி கொண்டும் இருக்கின்றான்

அப்படி இருக்க கடவுளே இல்லை
என்று ஒரு சிறு கூட்டமும்  கடவுள் இருக்கிறார்
என்று பெரும்பாலான மக்களும் நம்புகிறார்கள்

அவரை எப்படி அடைவது,உணர்ந்து கொள்வது என்பதை
மனிதர்களுக்கு வழிகாட்ட கடவுளை உணர்ந்த
தீர்க்க தரிசிகள் அந்தந்த பகுதிகளில்
வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளுக்கேற்ப
மதங்களை ஏற்படுத்தி சில வழிபாட்டு முறைகளையும்
தத்துவங்களையும், ஏற்படுத்தினார்கள்

காலபோக்கில் அந்தந்த மதங்களில் பல சுயநல பேர்வழிகள்
மதங்களின் உண்மையான தத்துவங்களை சிதைத்து
அதை சார்ந்துள்ள மக்களை ஆடுகளாகவும் மாடுகளாகவும்
மாற்றிவிட்டனர்.

அதனால் ஒருவொருக்கொருவர் 
அன்பில்லாமல்
பல நூறு ஆண்டுகளாக 
சண்டையிட்டு மடிந்து கொண்டிருக்கின்றனர்

அன்பால் அனைவரையும் இணைக்க 
வந்த மதங்கள் இன்று
மக்கள் அனைவரையும் அடிமாடுகளாக 
சில மத வெறி பிடித்த மனிதர்களிடம் சிக்கி 
சீரழிந்து கொண்டிருப்பதுடன் 
இந்த உலகத்தை ஒரு போராட்ட 
களமாக மாற்றிவிட்டனர்.

மதங்களிடையே உள்ள பொதுவான நல்ல கருத்துகளை
கொண்டு அனைவரிடமும் ஒரு நல்லிணக்கத்தை
ஏற்படுத்த பல ஞானிகள் முயன்று வெற்றி பெற்றாலும்
அதை தன் சுய லாபத்திற்க்காக சீரழிக்க பல குழுக்கள்
தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு வருவதால்
இந்த உலகில் அமைதி மக்களுக்கு
எட்டா கனியாகவே இருந்து வருகிறது

நம்மையெல்லாம் படைத்த
அந்த இறைவன்தான் இதற்கு
நல்ல வழி காட்ட வேண்டும்
என்று பிராத்தனை செய்வோமாக

.

2 comments: