Tuesday, September 18, 2012

தடைகளும் கணபதியும்

தடைகளும் கணபதியும் 

மனிதகணம்,தேவகணம், பித்ருகணம்,
பேய்க்கணம், என பல உயிர்களில் பல பிரிவுகள் அடங்கியுள்ளன. 

ஒவ்வொரு உயிரினங்களும் வெவ்வேறு
சூழ்நிலைகளில் வாழ படைக்கப்பட்டிருக்கின்றன/பழக்கப்படிருக்கின்றன 
அவைகளுக்காக உலகங்களும் இறைவனால்
உருவாக்கப்பட்டிருக்கின்றன

உதாரணமாக தேவகணங்கள் மனிதர்களைப்போல் வாழமுடியாது
அவர்களுக்கு மனிதர்களை போல் பௌதிக உடல் கிடையாது.
ஆனால் மனிதர்கள் இந்த பூமியை தவிர வேறெங்கும் வாழ இயலாது.

இதை தவிர மனிதர்களுக்குள்  தலைக்கனம் என்று ஒன்றும் உண்டு 
அது அவர்களையும் அழிக்கும் அவர்கள் வாழ்கின்ற இந்த உலகையும் 
அழிக்கும். அதை அடியோடு வெட்டி சாய்க்கின்ற  தெய்வம் 
கணபதியே என்பது அனைவருக்கும் தெரியும் 

இதுபோன்ற அனைத்து கணங்களையும் மேய்ப்பதற்கு ஒரு 
தலைவர் உள்ளார். அவர்தான் கணங்களின்  பதி   அதாவது தலைவர்
அவர்தான் கணபதி ,விநாயகர் அதாவது  we நம் அனைவருக்கும் நாயகர் (தலைவர்)  என கொண்டாடப்படுகிறார் .

இந்த உலகம் பஞ்ச பூதங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது 
மனிதர்கள் ஐம்புலன்களின் உதவியால்தான் பார்க்கின்றனர், கேட்கின்றனர், பேசுகின்றனர் மூச்சு நிற்கும் வரை சுவாசிக்கின்றனர், வாய் மூலம் 
மூச்சு முட்டும் வரை வயிற்றை நிரப்பிகொள்கின்றனர் .

எல்லாவற்றிற்கும் ஒரு வரைமுறை, வரையறை உண்டு.
அதை உயிர்கள்  மீறினால் அது அவர்களுக்கும் அழிவு,
அவர்கள் வாழும் இந்த உலகத்திற்கும் அழிவு. 

அதனால்தான் தடைகள் ஏற்படுத்தப்பட்டு 
அனைத்தும் முறைபடுத்தபட்டன. 
தடைகள் நமக்கு நன்மையே புரிகின்றன
விளக்கில் மின் தடை ஏற்பட்டால் 
ஒளி  கிடைக்கிறது
இஸ்திரி பெட்டியில் ஏற்பட்டால் 
வெப்பம் கிடைக்கிறது 
என சொல்லிக்கொண்டே போகலாம். 

சாலைகளில் வேக தடை இருப்பதால் 
பல லட்சக்கணக்கான வண்டியோட்டிகள் 
எமனுலகிர்க்கு அல்ப ஆயுசில்
செல்லாமல் தடுக்கப்படுகிறார்கள். 
ஆனால் அதை மீறியவர்கள் அடிபட்டு 
வாழ்நாள் முழுவதும் துன்பத்தில் கிடக்கிறார்கள்
பலர் அடியோடு இல்லாமல் போய்விட்டார்கள் 

அடிக்கடி மின்தடை ஏற்படுவதால்
நமக்கு கணிசமாக 
மின்கட்டண செலவு குறைகிறது. 

மனிதர்கள் செய்யும், பல செயல்கள், 
பேச்சுக்கள் மனித இனத்திற்கும்,
இவ்வுலகிற்கும் பேரழிவுகள் ஏற்படுவதால் 
அவர்களின் செயல்களை கட்டுபடுத்த 
பல தடை சட்டங்கள் அவர்களாலேயே 
நிறைவேற்றப்பட்டுள்ளன 

ஆனால் அதை மீறி தன்னுடைய MRP RATING ஐ 
உயர்த்திக்கொள்வதிலேயே பல அரசியல் தலைவர்கள்
தங்கள் வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கிறார்கள் .
போதாக்குறைக்கு பலரையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டு 
இவ்வுலகை தினமும் குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள் 

எது எப்படி இருந்தாலும் மனிதன் செய்யும்
எந்த செயலானாலும் நல்லபடியாக தொடங்கி 
தடைகளின்றி முடிவுரவேண்டும் என்று விரும்புகிறான்.
அதற்க்கு அனைத்து இந்துக்கள்  
நம்புவது கணபதியைதான்

அவரும் எளிமையானவர். எல்லோராலும் 
எங்கு வேண்டுமானாலும் அணுகக்கூடிய நிலையில் உள்ளவர்
அன்புடன் எதை அளித்தாலும் ஏற்று மகிழ்பவர்.
ஒன்றும் அளிக்காமல் பார்வையாலே வணங்கினாலும்
வரமளிக்கும் தயை  உடையவர்.அமைதியாக வணங்கினாலும் ஆர்பாட்டத்துடன் ஆடம்பரமாக வழிபாடுகள் செய்தாலும் 
ஏற்றுக்கொண்டு அமைதியாக இருந்துகொண்டு வழிபடுபவர்களுக்கு மனதில் அமைதியையும் ஆனந்தத்தையும் வாரி வாரி வழங்குபவர்  

இறைவன் மதங்களுக்கு அப்பாற்ப்பட்டவர் .எல்லா உயிர்களுக்கும்  பொதுவானவர். சிலர் நினைப்பதுபோல் ஒவ்வொரு மதத்திற்கும் தனி தனியாக கடவுள்கள் இருக்கிறார்கள்,தன்  கடவுள்தான் சக்தி வாய்ந்தவர் என்று நினைப்பதெல்லாம் உண்மையன்று 

நினைப்பவர்க்கு நினைக்கும் வடிவில் தோன்றி 
கடவுளின் சக்தி நலம் தரும். என்பதுதான் உண்மை 
வடிவங்கள் கடவுள் அல்ல. வடிவங்கள் மூலம் நம் மனம் 
கடவுளின் சக்தியை பெறுகிறது .என்பதை புரிந்து கொண்டால் 
மத மோதல்கள் ஒழியும் 
அந்த நிலை என்று வருமோ?

விநாயகர் சதுர்த்தி தினமான இந்நாளில் 
அவரை வணங்கி இன்று உலகமனைத்தும்
மக்கள் நன்றாக அன்போடு, ஆரோக்கியமாக 
மன நிம்மதியுடன் வாழவும் 
அதற்க்கு  தடையாக உள்ளவர்களின் 
மனதில்உள்ள தீய எண்ணங்கள் நீங்கி /
நீக்கி இவ்வுலக வாழ்க்கை
இன்பமாக திகழ மனமுருகி பிரார்த்திப்போம்



6 comments:

  1. Weநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்! நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete


  3. இதுபோன்ற அனைத்து கணங்களையும் மேய்ப்பதற்கு ஒரு
    தலைவர் உள்ளார். அவர்தான் கணங்களின் பதி அதாவது தலைவர்//

    இதுவரை யாரும் சொல்லாத புதுமையாக
    வித்தியாசமாக அருமையாகச் சிந்தித்துள்ளது
    மனம் கவர்ந்தது
    சதுர்த்திச் சிறப்புப்பதிவு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கருத்தூன்றி படித்து கருத்துக்களை
    வெளியிட்டமைக்கு மூவருக்கும் நன்றி

    கணபதி ,குணநிதி, எனப்படும் விநாயகன்
    குளக்கரையிலும் இருப்பான்
    மலை முகட்டிலும் இருப்பான்
    அவன் நம் மன குகையிலும் உள்ளான்
    அன்புடன் அவனை நினைந்து வழிபட்டால்

    ReplyDelete
  5. சதுர்த்திச் சிறப்புப்பதிவு அருமை
    நன்றி

    ReplyDelete
  6. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete