Wednesday, September 5, 2012

ஏன் இந்த விருப்பும் வெறுப்பும் ?

ஏன் இந்த விருப்பும் வெறுப்பும் ?

எல்லா மனிதர்களும் படைப்பில் ஒன்றுதான் 
தாயின் வயிற்றிலிருந்துதான் வெளிவருகிறார்கள் 
நாயின் வயிற்றிலிருந்து வெளிவருவதில்லை 

ஒரு தாய் தன் மகனை மட்டும் நேசிக்கிறாள் 
அதன் பெயர் பாசம் 

ஒரு அநாதை இல்லம் நடத்தும் ஒரு பெண்மணி 
அங்குள்ள அனைத்து குழந்தைகளையும் நேசிக்கிறாள் 
அது நேசம் அல்லது அன்பு 

பள்ளியில் பல குழந்தைகள் படிக்கின்றனர் 
சில குழந்தைகள் விளையாட்டில் வென்று
 பரிசுகள் பெற்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகின்றன 
விளையாட்டில் தன் குழந்தை தோற்றுபோய் பரிசுகள் 
ஒன்றும் கொண்டு வராமல் போனால் பரிசு பெற்ற 
குழந்தைகளை பாராட்ட முன்வருவதில்லை 
மாறாக வெறுப்பு கொள்கிறாள்.அதன் பெயர் பொறாமை 

ஒருவன் ஒரு பொருளை அடைய முயற்சி செய்கிறான். 
கடைசி நேரத்தில் ஒருவன் தோன்றி 
அதை தட்டி சென்று விடுகிறான் .
அவன் மீது இவனுக்கு வெறுப்பு ஏற்ப்படுகிறது .
அதன் பெயர்  கோபம்,குரோதம் 

ஒரு போட்டி .கடுமையாக இருக்கிறது.
ஒரு கால கட்டத்தில் அதில் பங்கு பெற்றவனுக்கு 
தன்னால் வெல்ல முடியுமா என்ற சந்தேஹம் எழுகிறது 
அதன் அடிப்படை உணர்ச்சி பயம் 


உலகம் முழுதும் மனிதர்களை 
எந்த இனமானாலும், 
ஜாதியானாலும், ஆட்டி படைப்பது 

ஆறு வகை உணர்ச்சிகள்தான் .
அவை காமம்(ஆசை)குரோதம்(கோபம்)
மோஹம் (ஈர்ப்பு) லோபம் (கஞ்சத்தனம்),
மதம்(திமிர்/அகந்தை)
மாச்சர்யம்(பொறாமை/அழுக்காறு) ஆகியன 

இவைகளில் எந்த உணர்ச்சி இருந்தாலும் மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள். அது எல்லை மீறும் போது 
அவர்கள் சமூகத்தில் ஆபத்தானவர்களாக 
மாறிவிடுகிறார்கள் அவர்கள் மற்றவர்களையும்
அழித்து தாங்களும் தங்கள் முடிவை 
தானே தேடிக்கொள்கிறார்கள்

அதனால் நாம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி 
மனதில் நம்பிக்கையையும், உழைப்பையும் அதிகப்படுத்தி 
அனைவருடனும் அன்போடு பழக முயற்சித்தால் 
இவ்வுலகம் நன்றாக இருக்கும்.

விருப்பையும் வெறுப்பையும் நாம்
கட்டுப்படுத்த தவறி விட்டால்
 நம் வாழ்க்கை சோகத்தில்தான் முடியும்.

இதை பொறுப்பில் உள்ளவர்கள் முக்கியமாக 
கவனத்தில் கொள்ள வேண்டும் ஏனென்றால் 
அவர்கள் பின்னால் எதையும் ஆராயாமல் 
அவர்கள் தலைவர் செய்வதை,கூறுவதை 
அப்படியே செயல்படுத்தும் ஒரு கூட்டம் 
இருக்கிறது என்பதை அவர்கள் 
நினைவில் கொள்ள வேண்டும் 

அவ்வாறு செய்கிறார்களா என்பது கேள்விக்குரியது  

1 comment:

  1. ஒவ்வொரு குணமும், பண்பும் எதனால் என்பதை நன்றாக விளக்கி உள்ளீர்கள் சார்... அதுவும் ஆறு வகை உணர்ச்சிகள் - உண்மை... நன்றி...

    ReplyDelete