Tuesday, September 4, 2012

அன்பே வடிவான இறைவனை அனுதினமும் வழிபட்டுவந்தால் அனைத்து நலன்களும் விளையும்

ஆன்மீகத்தில் உள்ளவன்
கடவுளை நம்புகிறான்

தன்னை நாத்திகன் என்று
அழைத்து கொள்பவன்
கடவுளை நம்ப மறுக்கிறான்.

ஆத்திகன் என்றாலும் நாத்திகன் என்றாலும்
உடலில் உயிர் இருந்தால்தான்,
அறிவில் தெளிவு இருந்தால்தான்
செயல்பட முடியும்  என்பதை மறுக்க முடியாது

உடலில் உயிர் இருந்தாலும்
கோமா நிலையில் இருப்பவனுக்கு
எதுவும் தெரியாது

இந்த உடல் இயங்க ஒரு சக்தி தேவை .
சக்தி இருந்தாலும் அதை நெறிபடுத்த
பிறிதொரு சக்தி தேவை .
ஒவ்வொரு வகை செயலுக்கும்
வெவ்வேறு அளவில் சக்தி தேவைப்படுகிறது.
அந்த சக்தி நமக்குள் இருக்கிறது
.நாம் அனைவரும் அந்த சக்தியை உணருவதில்லை
.அந்த சக்திதான் கடவுள் .

அதை உணர்ந்துகொண்டு
அதன் போக்கிற்கேற்ப நாம் வாழ
கற்றுகொண்டோமானால் நமக்கு துன்பமில்லை .

அதை விடுத்து தன்னால்தான்
அனைத்தும் நடைபெறுகிறது என்ற அகந்தை
நம்முள் தலை தூக்கினால் எல்லாம் தலைகீழாக மாறிவிடும்

புறத்தே கோயில்களும் அதனுள்ளே வடிவங்களும்
நம் உடலாகிய  கோயிலில் அகத்தே உறையும்
கடவுளின் சக்தியை நாம் உணர வழி வகுக்கும்
சாதனங்களாகும்.

சாதனங்களின் துணை கொண்டு
சாதனை செய்தால் வேதனைகள் தீரும்
போதனைகளை கடைபிடித்தால் வாதனைகள் தீரும்

பாலில் நெய் இருந்தும் பாலை கடையாமல்
வெண்ணை எடுத்து,அதிலிருந்து நெய் எடுக்க முடியாது
பகலில் விண்மீன்கள் இருந்தும்
பகலில் விண்மீன்களை காண இயலாது
உட்கொண்ட உணவு எவ்வாறு சத்துக்களாக மாறி உடலில் ஒவ்வொரு அணுக்களுக்கும் செல்கிறது என்பதை அறிய முடியாது
அதை போலதான் எத்தனையோ விஷயங்கள் நம் உடலிலும்
நம்மை சுற்றியுள்ள உலகிலும் ஏராளமாக இருக்கின்றன

எல்லாவற்றையும் படைத்து ,காத்து,
அழித்து,மறைத்து தன்னுள் ஒடுக்கி கொள்கின்ற
கடவுளின் மகிமையை யாரும் எளிதில் அறிய முடியாது

உயிருள்ள உடலின் இயக்கங்களை
அறிய உயிரற்ற கருவிகளை பயன்படுத்த வேண்டிய
துர்பாக்கியத்தில் இன்றைய மருத்துவர்கள் உள்ளனர்


எனவே கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை
என்ற வாதங்களை ஒதுக்கிவிட்டு நம்பிக்கையுடன்
அன்பே வடிவான இறைவனை அனுதினமும்
வழிபட்டுவந்தால் அனைத்து நலன்களும் விளையும் 

1 comment:

  1. எதை விட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது...

    /// உடலில் உயிர் இருந்தாலும்
    கோமா நிலையில் இருப்பவனுக்கு
    எதுவும் தெரியாது /// - சூப்பர்...

    ReplyDelete