Saturday, November 3, 2012

பத்ராசலம் ராமதாசர்


பத்ராசலம் ராமதாசர்















பத்ராசலத்தில் தனக்கு கோயில்
கோயில் எழுப்பிய கோபண்ணாவை
அரசன் சிறையில் அடைத்து
12 ஆண்டுகள் கொடுமைப்படுத்தியதை
ஏன் தடுத்து காப்பாற்றவில்லை
என்று சிலர் கேட்கிறார்கள்.
ஸ்ரீராமன் தர்மத்தின் வடிவம்.

தாசில்தார் பொறுப்பில் இருந்த
கோபண்ணா அரசு பணத்தை
எடுத்து கோயில் கட்டியது அரசு பணத்தை
கையாடல் செய்தமைக்கு ஒப்பாகும்.

அதனால் அரசன் அவருக்கு கொடுத்த
தண்டனை சரியானதே

அவர் இறைவனுக்கு கோயில்
கட்டவேண்டுமென்று நினைத்தால்,
அவர் தன் கையில் உள்ள பணத்தை
போட்டு கட்டியிருக்கவேண்டும்
அல்லது பொது மக்களிடம்
பணம் வசூல் செய்தோ அல்லது
அரசனின் அனுமதி பெற்று
பணியை செய்திருக்க வேண்டும்.

தண்டனைக்காலம் முடிவடைந்தபின்
அவரை ராமபிரான் ஆட்கொண்டான்.
அருள் செய்தான்,

எனவே இறைப்பணி யானாலும்
சட்டத்திற்கு புறம்பாக செய்யும்
எந்த செயலையும்
இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை

4 comments:

  1. இறைப்பணி யானாலும்
    சட்டத்திற்கு புறம்பாக செய்யும்
    எந்த செயலையும்
    இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை
    -உண்மைதான் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தவறு செய்தாலும்
      இறைவன் நம்மை
      காப்பாற்றுவான்
      நாம் அவன் மீது நம்பிக்கை
      இழக்காமலிருக்குவரையில்

      ஆனால் அதற்குரிய தண்டனையை
      நாம் அனுபவித்த பிறகுதான்

      அதுவும் யாரையும்
      நிந்திக்காமல்
      முணுமுணுக்காமல்
      அதுவும் பொறுமையை
      கடைபிடித்தால்
      அப்போது அவன் அருள்
      தவறாது கிடைக்கும் நிச்சயம்.

      மேல கண்ட படமும் அடியேனால்
      மெடல் பாயிலில் செய்யப்பட்டது

      Delete