Thursday, April 25, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (22)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (22)







ஸ்ரீராமா உன் மனம் 
ஏன் இரங்கவில்லை?   

எக்காரணத்தினாலோ 
உன் மனம் இரங்கவில்லை

நான் செய்த பிழை என்னவோ நானறியேன்
எங்கு அல்லது எதை நோக்கினும் 
அதை தயரதன் மைந்தனான இராமனாக எண்ணும் 
 என்னிடம் உன்மனம் இளகவில்லை 

என்னிடம் அன்பு பூண்டவர்கள் கூட 
என்மீது பொறாமை கொள்கின்றனர்
என்னை வெறுப்பவர்களோ "இவன் எம்மாத்திரம்" 
என்று என்னை பலவிதங்களில் திட்டுகின்றனர்

ஒருசிலர் "இவன் ஆதரவிற்கு தகுந்தவநல்லன் " 
என்று திரும்பி பார்க்கவும் யோசித்தனர்

நியமமாக என்னைக் காப்பவர் யாருமிலறென்று 
உன்னையே வேண்டிநிற்கும் 
ஏன் மீது உன் மனம் இரங்கவில்லை

செல்வம், மக்கள்,பெண்டிர்,ஆகியவை 
கண்டு "இவை நம்மை சேர்ந்தவை" என்று மயங்கினர்  

ரகுவம்சம்மென்னும்  கடலில் உதித்த சந்திரனே 

! ஸ்ரீராமா!என்னையும் அக்கதிக்கு ஆளாக்காமல்
உன்னிடம் ஆயிரக்கணக்கில் கோரிக்கைகளை 
வைக்கும் என்னை கருணையுடன் நீ காப்பாற்றவேண்டும். 

பற்றில்லாத இராமபிரானே!
இவ்வளவு அலட்சியம் நீ செய்யலாகாது

சரணடைந்தவர்களை காப்பவனே !
உன்னையே நம்பினேன்.
தாரக நாமத்தாய்!பராத்பரா!
இத்தியாகராஜனின் சித்தமிசை வசிப்பவன் நீயே
என்று தெரிந்து மிகவும் வேண்டினேன்

நீயே கதியென்று இரவு பகலாய் 
ஆயிரம் தடவை முறையிட்டஎன் மீது உன்மனம்  
ஏனோ இரங்கவில்லை 
(கீர்த்தனை-எந்துகோ-நீ மனசு கரகது(435)-ராகம்-கல்யாணி-தாளம்-ஆதி)

உலக மோகத்தில் மூழ்கியுள்ள மனிதர்களால் 
இராம பக்தனின் மன நிலையை புரிந்து கொள்ள இயலாது.

எதற்கெடுத்தாலும் எதிலும் ஆதாயத்தை 
எதிர்பார்க்கும் இந்தமக்கள் இறைவனின் அருள் வேண்டி 
அல்லும் பகலும் தவிக்கும் 
இராம பக்தனின் நிலையை அறியமாட்டார்கள்.

மாறாக பரிகசிப்பதிலும், 
துன்புறுத்துவதிலுமே நாட்டம் கொள்வார்கள் 

ஆனால் அவைகளைஎல்லாம் பொருட்படுத்தாது 
இராமனிடமே ஸ்வாமிகள் முறையிடுகின்றார். 

அதனால்தான் அந்த தெய்வத்தின் அருள்கிடைத்து 
அந்த அனுபவத்தை நமக்கெல்லாம் 
விட்டு சென்றிருக்கின்றார். 

எனவே எத்தனை சோதனைகளும் 
வேதனைகளும் வந்தாலும் 
ஸ்ரீராமனின் மீது உள்ள பக்தியை 
ராம பக்தர்கள் விடக்கூடாது 

நன்றி படம்-கூகிள் 



1 comment:

  1. உங்களின் விளக்கமும் அருமை ஐயா... நன்றி...

    ReplyDelete