Thursday, April 25, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(25)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(25)




















ஸ்ரீராமா என்னை அன்புடன் 
காப்பவர் உன்னை தவிர வேறு யாருளர்? 

இரகுபதி! 
என்னை அன்புடன் காப்பவர் 
உன்னைத் தவிர வேறு யாருளர்?

சகலலோக நாயகா!
நர ஸ்ரேஷ்டனே !

தேவேந்திரன் முதலியோரும் புகழும்வண்ணம் தயையுடன் விபீஷணனுக்கு இலங்கையை தானம் வழங்கி காத்தவர் யார்?

முனிவரின் யாகத்தை காண அவர் பின் சென்று ,துஷ்டனான மாரீசன் முதலியோரைக் கொன்று ஒழித்துக் காத்தவர் யார்?

வாலியை ஒரு கணை எய்து கொன்று.நீ சூரிய புத்திரனான சுக்ரீவனை அரசனாக்கியதுபோல் காத்தவர் யார்?

சம்சாரக்க்கடலை கடக்க உபாயமறியாத தியாகராஜனை கைபிடித்து காப்பவர் 
உன்னையன்றி  யாருளர்? 

(கீர்த்தனம்-ப்ரோசே-வாரெவெரெ-ரகுபதீ(529)-ராகம்-ஸ்ரீ ரஞ்சனி -தாளம்-ஆதி)

தன்பக்தர்களை கை பிடித்து காப்பதில் 
ஸ்ரீ ராமனுக்கு நிகர் யாரும் இல்லை 
என்று ஸ்வாமிகள் தெளிவாக கூறுகிறார் 

அபயம் என்று வந்தவன் எவராயினும் 
காக்கும் காகுத்தன் கோசலைராமன்.  

2 comments:

  1. /// அபயம் என்று வந்தவன் எவராயினும் ///

    அருமை ஐயா...

    ReplyDelete