Tuesday, April 9, 2013

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்


ஞாயிறு போற்றுதும் 
ஞாயிறு போற்றுதும்

மாதவன்தான் 
ஆதவனாய் 
ஒளி வீசுகின்றான்


அவன் ராமனாய் 
இப்புவியில் அவதரித்தபோது 
ராவணனை அழிக்க 
சூரிய பகவானை துதித்து 
சக்தி பெற உதவும் ஆதித்ய ஹ்ருதயம் 
என்னும் ஸ்தோத்திரத்தை 
அகத்தியபெருமான் நமக்காக 
தந்தருளினார் .

மிகவும் சக்தி வாய்ந்த துதி இது .
இதை தினமும் பாராயணம் செய்பவர்கள் 
நோயில்லா உடலும்,
பகைவரில்லா வாழ்வும் பெற்று 
ஆனந்தமாக வெற்றியுடன் வாழ்வார் 
என்பது அனுபவ உண்மை

ஆயிரம்கரங்கள் நீட்டி என்ற கர்ணன் 
படம் பாடல் சூரியனின் புகழ் பாடும் பாடல் 
அனைவருக்கும் தெரியும் 

செங்கதிர் தேவன் ஒளியினை தேர்கின்றோம் 
அவன் எங்கள் அறிவினை தூண்டி நடத்துக 
என்ற மங்களம் வாய்ந்ததோர் சுருதி மொழி 
என்று காயத்ரி மந்திரத்தை 
அழகிய தமிழில் மொழி பெயர்த்தான் பாரதி. 

ஆதவன்  இல்லாவிடில்  
இப்புவியில் உயிர்கள்   எது ?
ஒளி எது?சக்தி எது? 

நம்முடைய ஆன்மகாரகனாக 
விளங்கும் ஆதவனை
கண் முன்னே தோன்றும் 
கடவுளை அனுதினமும் 
போற்றுவோம்.வணங்குவோம் 
வளமான வாழ்வு பெறுவோம். 

இவன் வரைந்த ஆதவனின் படம் இதோ. 



2 comments: