Wednesday, April 3, 2013

சின்னஞ்சிறு பெண்போலே



சின்னஞ்சிறு பெண்போலே 












சின்னஞ்சிறு பெண்போலே
சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே
ஸ்ரீ துர்க்கை வீற்றிருப்பாள்

பெண்ணவளின்
கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக
வேறொன்றும் கிடையாது

மின்னலைப்போல்
மேனி அன்னை சிவகாமி

இன்பமெல்லாம் தருவாள்
எண்ணமெல்லாம் நிறைவாள்.

பின்னல்ஜடை போட்டு
பிச்சி பூ சூடிடுவாள்

பித்தனுக்குஇணையாக
 நர்த்தனம் ஆடிடுவாள்.

இந்த பாட்டை சீர்காழி கோவிந்தராஜன்
அவர்கள் பாடி கேட்க வேண்டும்
அதுபோதும் தெய்வீக இன்பம் தானாகவே
சித்திக்கும்.

3 comments:

  1. கணீர் குரலில் அற்புதமாக இருக்கும்...

    படமும் உங்களின் கைவண்ணத்திற்கும் பாராட்டுக்கள் ஐயா... வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
  2. உண்மைதான் அருமை குளத்தின் நடுவே துர்க்கையவள் குளிர்ந்திட்டாளோ

    ReplyDelete