Friday, April 12, 2013

வருக வருக தமிழ் புத்தாண்டே வருக வருக


வருக வருக 
தமிழ் புத்தாண்டே
வருக வருக 


கணநாதனின் அருளினால் 
தருக தருக வெற்றிகளை 
அனைவருக்கும்
தங்கு தடையில்லாது 


















ஜெயவிஜயீ பவ ! என்று 
கட்டியம் கூறும்
'விஜய'ஆண்டே
வருக வருக 



அரக்க மனம் கொண்டு 
அவனியியில் துன்பம்
இழைத்திடும் மனிதருள்ளத்தில் 
அன்பு நெறி
தழைத்திட செய்யும் 
ஆதி சிவனின் அருள் தருக 





அன்னை இலக்குமியின் அருளால் 
வளமற்றோரின் வாழ்வில் 
வறுமை நீங்கட்டும்  









அம்பிகையின் அருளால் 
வளமுள்ளோரின் மனதில் வளமான 
சிந்தனைகள் விளங்கட்டும் 













காக்கும் கடவுளாம் கண்ணனின் 
கருணையால்  இவ்வுலகம் 
நன்றாக வாழ வழிவகை உண்டாகட்டும் 










அன்னை கலைமகளின் 
அருளால் அனைவரின் உள்ளங்களில் 
கவிந்துள்ளஅறியாமை 
என்னும் இருள் நீகட்டும்
அறிவு தெய்வத்தின் ஒளி வெள்ளம்
அகிலமெங்கும் பரவட்டும் 










பெண்களை இழிவு செய்யும் பிற்போக்கு 
எண்ணம் ஒழியட்டும். மாதர்தம்மை 
போற்றி காக்கும் மங்கல பண்பு 
எங்கும் பரவட்டும். 










ஊழல் ஒழியட்டும்.சுற்று சூழல் 
பாதுகாக்கப்படட்டும். 
பூசல்கள் ஈசல்கள் போல்  
இப்பூமியிலிருந்து மறையட்டும் 



வேலியே பயிரை மேய்கின்ற 
தன்மைபோல் இந்த சமுதாயத்தை 
ஏமாற்றுகின்ற போலிகள் 
கிலி பிடித்து ஓடட்டும்.












அன்பே சிவம் 





அன்பே சக்தி 





உண்மைநெறி தழைக்கட்டும்.
உதவாக்கரைகள் 
ஓரங்கட்டப்படட்டும் 







அன்பே கந்தன் 






என்றஅன்பு நெறி 
தழைக்கட்டும்








உயரிய 
ஆன்மீக நெறி 
ஓங்கட்டும்.

அவனியில் போர் மேகங்கள் 
கலைந்து போகட்டும்.
அணுகுண்டு மழை பொழியாது 
அன்பு மழை அமிர்தமென 
பொழியட்டும்.  

வெற்றிகளை குவிக்க வரும்
வெற்றி தேவதையே 

விஜய புத்தாண்டே 
வரவேற்கிறேன் உன்னை 
உளம் கனிந்து.



நல்லோர் அனைவரின்
 பிரார்த்தனையும். அதுதான்  

அதுதான்  
இவன்  பிரார்த்தனையும்.  

3 comments:

  1. உங்களுக்கும் மனம்கனிந்த சித்திரை திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete