Saturday, April 5, 2014

கண்ணா ! கண்ணா !

கண்ணா ! கண்ணா !




ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

கண்ணா!
எண்ணமெல்லாம்
உன் வடிவம் நிறைந்துவிட்டால்
இனி ஏது  பிறவி?

மனம் என்னும் அலைகடலில்
கரையை நோக்கி  அலை அலையாய்
அடுத்தடுத்து வரும்
கவலைகள் அப்படியே
திரும்பி ஓடிவிடும்
கண்ணா நீ என் மீது
அக்கறை கொண்டு விட்டால் !

செவியினில் உன் நாமம்
என்றும் ஒலித்திருக்க
இப்புவியில் இனி ஏது துன்பம்?

அழியாப் பரமபதம் நீ அளிக்கக் காத்திருக்க
பாரினில் உள்ளஅழியும் பொருட்கள் மீது
இனி மோகம் கொள்ளேன்.



3 comments:

  1. படமும் அருமை. கருத்தும் அருமை.

    ReplyDelete
  2. இன்றே வரைந்தேன்
    இன்றே பதிவிட்டேன்

    ReplyDelete
  3. மனதில் இருந்தால் தான் கைவண்ணமும் சிறக்கும்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete