Friday, May 16, 2014

தாமரை செல்வியே தயை புரிவாய்.

தாமரை செல்வியே தயை   புரிவாய். 


ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


அலைகடலில் தோன்றிய அன்னையே
அரவணைப்பள்ளியானின்  இதயத்தில்
இடம்கொண்டான்  உன்னையே

அதிகாலையில் தீபமேற்றி
உன்னை வணங்கும் பக்தர் வாழ்வில்
வளம் சேரும் உண்மையே

இல்லை என்ற சொல்லை
இல்லாமல் ஆக்கிடும்
இலக்குமிதேவி நீ

தாமரை மலரில்
 வீற்றிருக்கும் தேவியே
உன் பார்வை பட்டால்போதும்
வறுமை அகன்றிடும்
வாழ்வில் பெருமைகள் குவிந்திடும்.

செல்வத்தினால்  செருக்குற்றால்
அகன்றிடுவாய்

இல்லாதோர்க்கு
உதவினால் நீ மகிழ்ந்திடுவாய்.

அறம்  வளர்க்கும் நாயகியே
அரங்கனிடம் அடியவர்களின்
குறை காணாது அருள் செய்ய
பரிவு காட்டும் தாயே

என்றென்றும் என் உள்ளத்தில்
நீங்காது  நின்று அருள் புரிவாய் 

3 comments:

  1. Replies
    1. வறுமை அகன்றிடும்
      வாழ்வில் பெருமைகள் குவிந்திடும்.sriram

      Delete
  2. ஓவியமும் மிகவும் சிறப்பு ஐயா...

    ReplyDelete