Wednesday, May 21, 2014

திருப்பதி வாசனே

திருப்பதி வாசனே 


ஓவியம். தி.ரா.பட்டாபிராமன் 


திருப்பதி வாசனே
திருவோடு விளங்கும் ஈசனே

திருமலையில் நின்றருளும்
திருமாலே காணக் காண
திகட்டாத தெள்ளமுதனே

மலைபோல் துன்பங்கள்
வந்தாலும்  கலங்காத மனம்
வரமருள்வாய்

பொறுப்போடு பக்தர்களின்
அல்லல்  அகற்றும் அலைமகளை
திருமார்பில் கொண்டவனே

நாவில் உன் நாமம் எந்நேரமும்
தவழட்டும்.இதயத்தில்
உன் திருவடிவம் நிலையாய்
நின்று மாறா இன்பம் அருளட்டும்.

பாரிலுள்ளோர் அனைவரும்
பகைமை நீக்கி அன்போடு
பரம சாந்தியுடன் வாழ
கருணை செய்வாய்



5 comments:

  1. படம் அற்புதம் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //பாரிலுள்ளோர் அனைவரும்
    பகைமை நீக்கி அன்போடு
    பரம சாந்தியுடன் வாழ
    கருணை செய்வாய்//

    இந்த நேரத்துக்குத் தேவையான பிரார்த்தனைதான் இது! ஓவியம் அருமை.

    ReplyDelete
  3. ஜாதி மத பேதமின்றி அனைவரும் இந்த பிரார்த்தனையை காலையும் மாலையும் செய்து வந்தால் போதும் இந்த உலகம் ஸ்வர்க்கமாகிவிடும்

    ReplyDelete
  4. Nice drawing.Please do visit once to the Thirusoolam temple. Tomorrow is friday. I will be in the temple (between 5 pm to 8.pm) If possible please do visit

    ReplyDelete
  5. Nice drawing. Please do visit the Thirusoolam temple once. Tomorrow is friday, i will be in the temple between 5 pm - 8 pm.

    ReplyDelete