Monday, May 26, 2014

இறைவனுக்கு நன்றி

இறைவனுக்கு நன்றி 




நம் நாடு 1947 ஆம் ஆண்டு வெள்ளையர்கள்
என்ற கொள்ளையர்கள் நம் நாட்டை துண்டாடி
நம் நாட்டு கொள்ளையர்களிடம்
ஆட்சியை ஒப்படைத்தனர்.

தெய்வ நம்பிக்கை யற்றவர்கள், நம் புண்ணிய
பாரத பூமியில் நிலவும் உயரிய
பண்பாட்டை சிதைத்தவர்கள் இன்று காணாமல்
போய்விட்டனர். அவர்கள் நிரந்தரமாக தலை தூக்க விடாமல்
சித்தர்களும் யோகிகளும் ரிஷிகளும், மகான்களும்
நம்மையும் நம் நாட்டையும் காப்பாற்றுவார்களாக

கங்கா மாதாவையும், அவளை தான் சிரசில் தாங்கியுள்ள
கங்காதரனையும் வணங்கி ,பாராளுமன்றத்தை கோயிலாக
கருதி வணங்கி பதவியை ஏற்றுக்கொண்ட நம்
பாரத பிரதமர் பல்லாண்டு வாழி

நம் நாட்டை பலமுள்ள நாடாக
நம் பண்பாட்டை உயர்த்தும் விதமாக,
நம் நாட்டு மக்களை சுரண்டல்காரர்களிடமிருந்து மீட்டு
அவர்களுக்கு நல்ல வாழ்வாதாரத்தையும்.
 நம்மை சுற்றியுள்ள நாடுகளுடன்
அமைதியான   நல்லுறவை பேணுபவர்களாக
விளங்க வழி வகை மேற்கொள்ள
எல்லா தெய்வங்களும்
அனைவருக்குள்ளும் அந்தராத்மாவாக
விளங்கும் அந்த கண்ணன் துணை புரிவானாக .

அனைத்துயிர்க்கும் அபயம் அளிக்கும் ஆத்மராமன்
அனைவரின் வேண்டுதலையும் நிறைவேற்றி வைப்பானாக


4 comments:

  1. உண்மைதான்.. அனைவரின் வேண்டுதலையும்
    எம்பெருமான் நிறைவேற்றி வைப்பானாக!..

    ReplyDelete
  2. //நம் நாட்டு கொள்ளையர்களிடம்//

    :)))))))))))))))

    நல்லாட்சி நடத்த பிரதமர் மனதில் இறைவன் துனையிருப்பாராக.

    ReplyDelete
  3. நல்லதே நடக்கட்டும் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நடக்கட்டும் நல்லதே DD

      Delete