Tuesday, May 27, 2014

மனதிற்கு உபதேசம்

மனதிற்கு உபதேசம் 





மனமே நீ எப்போதும்
ஸ்ரீராமபிரானின் திருவடிகளையே நாடு
அதுதான் உன் நிரந்தர வீடு

புலன்களின் பின்னே செல்லாதே
பின் துன்பங்களில் சிக்கி தவிக்காதே

சொந்தங்களும் பந்தங்களும்
விரிக்கும் வலையில் வீழாதே

எதையும் உனதென்று எண்ணாதே
எது வந்தாலும் மன அமைதியை இழக்காதே

வண்ண வண்ண ஜாலங்கள் காட்டும்
நீர்க்குமிழியே இவ்வுலக வாழ்வு

நீர்க் குமிழி வெடித்து வெளியேறும்
உள்ளிருக்கும்  காற்று  போல்
இந்த உடலில் உள்ளே வந்து போகும் காற்று
வெளியேறிவிடும் சந்தடியில்லாமல்.

இதயத்தில் உறையும் இறைவனைக்
கண்டுகொண்டால்  என்றும் துன்பமில்லை


3 comments:

  1. //எதையும் உனதென்று எண்ணாதே
    எது வந்தாலும் மன அமைதியை இழக்காதே//

    சிறப்பான வரிகள். ஓவியம் அருமை.

    ReplyDelete
  2. // நீர்க்குமிழியே இவ்வுலக வாழ்வு //

    100% உண்மை...!

    ReplyDelete