Saturday, May 3, 2014

மறை பொருளாய் இருப்பது பரம்பொருள்


ஆதி சங்கரா! 
எதி ராமானுஜா !


மறை பொருளாய் இருப்பது 
பரம்பொருள் 

அதே நேரத்தில் நேரத்தில்
நம் முன்னே இருந்தும் அதை
அறிய வொண்ணாது
மறைக்கும் மாயப் பொருள்

உடலெடுத்த உயிர்கள்
உடலை பராமரிப்பதிலேயே
முழுக் கவனமும் செலுத்தி
மரிக்கின்றன.

உடலில் இருக்கும் மனமோ
உண்மையை அறியவொட்டாது
புறவுலகிலேயே நம் கவனத்தை
செலுத்த வைப்பதில் குறியாய்
இருக்கிறது.

உள்ளம் என்னும் கோயிலில்
உறையும் தெய்வத்தை உணர  விடாது
செய்யும் சக்திகள் கோடி கோடி.

நம்முள் உறையும் இறைவன்
நம் மீது இரக்கம் கொண்டு மனித வடிவாக
வடிவம் கொண்டு நம்மோடு பழகி
நமக்கு அவனை அறியும் வழியைக்
காட்டுகிறான்.

ஆதி குருவே ஆதி சங்கரனாய் வந்தான்
காலடியின் அவதரித்த அவன்தன்  காலடியால்
நம் தேசத்தை சுற்றி வந்து காலம் காலமாய்
மக்களை மாயையில் மூழ்க வைத்த
கொள்கைகளை அழித்தான்.

இந்த உடல் அழிவதற்குள்
பரம்பொருளை உணரும் வழியை
தன் அழியா ஞானத்தை
அளித்தருளினான்.



அனைவருக்கும் இறை நிலை அடைய
உரிமையுண்டு 1000 ஆண்டுகளுக்கு முன்
எதி ராமனுஜன் தோன்றி இவ்வையக
மக்களை காப்பாற்றினார்.



காலப்போக்கில் கட்டிடங்கள் அழிந்தன
ஆனால் அடித்தளம் உறுதியாய் இருந்ததால்
இன்று ஞானவாணி பெருமையுடன்
உலா வருகிறாள். தன குழந்தைகளின்
அறியாமையை போக்குகிறாள்.

வாழ்க ஆதி சங்கரா ! வாழி ஸ்ரீ ராமானுஜா.

3 comments:

  1. ஸ்ரீஆதிசங்கரர் போற்றி..
    ஸ்ரீராமானுஜர் போற்றி!..

    ReplyDelete
  2. இந்த உடல் அழிவதற்குள் உரிமையை அடைந்து விடுவோமோ ஐயா...?

    ReplyDelete
  3. ஸ்ரீ ராமானுஜர் அவதாரத் திருநாள் பதிவு அருமை.

    ReplyDelete