Sunday, May 4, 2014

வேலை வணங்குவதே என் வேலை

வேலை வணங்குவதே 
என் வேலை




                                                                                ஓவியம் தி. ரா. பட்டாபிராமன் 


வாடிய மனதை
வாடா மலராய்
மாற்றிடும் முருகா

வேலை வணங்குவதே
என் வேலை உன் தாளை
வணங்கவே எனக்குத்
தந்தாய் தலையை

உந்தன் வண்ண மிகு மயில்
நஞ்சைக் கக்கும்
நல்லப்பாம்பை வைத்திருக்கும்
தன்  காலடியில்

நஞ்சையொத்த  எண்ணங்கள்
என் நெஞ்சில் என்றும்
தோன்றா வண்ணம்
என்னை காத்திடுவாய்.

அழகே உருவாய் அமைந்தவா
அடியார் உள்ளத்தை விட்டு
அகலாது அருளும் அரோகரா
என்றும் செப்புவேன் உன்
நாமம் முருகா முருகா  என்று.

1 comment: