Tuesday, May 13, 2014

பக்த பிரகலாதன் செய்த துதி

பக்த பிரகலாதன் செய்த துதி 






பிரகலாதன் 
ஹரியின் பரம பக்தன் 

தாயின் கருவிலேயே நாரத மகரிஷியால் 
நாராயண மந்திர உபதேசம் பெற்ற புண்ணியன் 

அவனை தன மகன் என்றும் பாராது 
கர்வம் கொண்ட ஹிரண்யன்  பலவகையிலும் 
துன்புறுத்தியது மட்டுமல்லாது 
அவன் சித்திரவதை செய்து கொல்ல முயன்றான்  

ஆனால் ஹரியின் அருளால் அனைத்து  
துன்பங்களிலிருந்தும் பிரகலாதன் காப்பாற்றப்பட்டான். 

ஹரி இந்த அண்டம் முழுவதும் உள்ளான், 
ஒவ்வொரு அணுவினுள்ளும் உள்ளான் என்ற 
பிரகலாதனின் கருத்தை மெய்ப்பிக்க 
அங்கிருந்த தூணிலிருந்து வெளிப்பட்டு 
ஹிரண்யனை கொன்றான். 

தன் பக்தனுக்கு கொடுமை இழைத்த 
அரக்க மனம் கொண்டவனைக் கொன்ற பிறகும் 
ஹரியின் சீற்றம் அடங்கவில்லை .

அனைவரும் அவனை 
நெருங்கவே அஞ்சினர். 

பிரம்மனும், சிவபெருமானும், 
மற்ற தேவர்களும் வேண்டியும் 
நரசிங்கப் பெருமானின் சீற்றம் தணியவில்லை. 

அவர்களை அடுத்து மஹாலக்ஷ்மி நரசிங்கப்பெருமானை  
வேண்டியும் பலனில்லை. அவள் இதற்குமுன் 
இதுபோன்ற உக்ரத்தை கண்டதில்லை. 

உடனே அனைவரும் சிறுவன் பிரகலாதனை 
நரசிங்கப்பெருமானிடம் தன்  தந்தைமீது 
கொண்ட கோபத்தை விடுத்து  மீண்டும் 
சாந்தமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புமாறு  
வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர் 

கூப்பிய கைகளுடன் நரசிங்க பெருமானின் 
நோக்கி சென்று அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி 
பெருமானை போற்றித் துதிக்க தொடங்கினான்.
பிரகலாதன். 

இன்னும் வரும் 





2 comments: