Saturday, August 23, 2014

இரக்கம் வராமல் போனதற்கு என்ன காரணம்?

இரக்கம் வராமல் 
போனதற்கு என்ன காரணம்?

இரக்கம் வராமல்  போனதற்கு என்ன காரணம்?
சுவாமி என்று சிவபெருமானிடம் கேட்கிறார்
ஒரு பாடல் மூலம் கோபாலக்ருஷ்ண பாரதி


தி.ரா.பட்டாபிராமன் 

இந்த பாடலை  பாடகர்களும், பாடகிகளும், பாகவதர்களும்
அவர்களுக்கே உரிய குரலில் அற்புதமாகப் பாடி
நம் மனதை  உருக வைக்கின்றனர்.

அது இருக்கட்டும். நம் மீது இறைவன் இரக்கம்
காட்டாமல் இருக்க  என்ன காரணம் இருக்க முடியும்?

இறைவன் இரக்கமே உருவானவன்.
அவன் எப்படி அவன் படைத்த படைப்புகள் மீது
இரக்கம்  காட்டாமல் இருக்க முடியும். ?

இந்த பிறவியை அளித்ததே
அவன் கருணைதான்.

பிறவி எடுப்பதற்கு  முன்பே நமக்கு உணவுக்கும்,
வாழ்வாதாரத்திற்கும் ஏற்பாடுகள்  செய்தும் விடுகின்றான்.

அவனை நினைக்க மனதையும்
கொடுத்துவிடுகின்றான்.

எல்லாம் அவன் நமக்கு நாம் கேளாமலேயே அளித்தும் நாம்தான்
அதை உணரவில்லை. உணரவும் முற்படுவதில்லை.

தில்லை அம்பல நடராஜனையும் திருப்பதி வாசனையும்
திரிபுரசுசுந்தரியையும் மனம் ஒன்றி நினைப்பதில்லை.

இறைவன் நம் மீது இரக்கம்  காட்டவில்லை என்று நாமாகவே 
தவறாக கற்பித்துக்கொண்ட எண்ணம்தான் காரணமே யன்றி 
இறைவன் மீது எந்த தவறும் கிடையாது. 

ஒரு மரக்கட்டை இருக்கிறது.
அதில் மின்சக்தி பாயுமோ?
பாயாது என்று அனைவருக்கும் தெரியும்.

ஆனால்  அதே மரக்கட்டையில்
ஈரம் இருந்தால் மின்சக்தி பாய்கிறது.

கல்லில் மின்சக்தி பாயுமோ ? பாயாது
அதில் இறையுருவை வடிவமைத்தும்
பால்.தயிர், பழங்கள், இளநீர் போன்ற
 நீர் சம்பந்தப்பட்ட பொருட்களால் திருமஞ்சனம் செய்யும்போது
இறை சக்தி அதனுடன் கலந்து நமக்கு அருள் செய்கிறது.

நம் மனம் தான் என்ற அகந்தையினால் கல்போன்று இறுகிப்போய்,உலர்ந்த மரக்கட்டை போல் ஆகிப்போய் இரக்கம் , அன்பு, பரிவு, தியாகம், போன்ற  பண்புகள் இல்லாமல் ஈரமற்று இருந்தால் அதன் வழியாக இறை சக்தி எப்படி வெளிப்படும் என்பதை உணர்ந்துகொண்டு நாம் நம்மை மாற்றிக்கொண்டால் இறைவன் நம் மீது காட்டிக்கொண்டிருக்கும் இரக்கத்தை உணர்ந்து அனுபவிக்கமுடியும். 

முயற்சி செய்வோம் மனதில் இறைவனைத் தவிர அனைத்து எண்ணங்களும் நீங்கும்வரை. இறுதி மூச்சு உள்ள வரை.

பாடலை கேட்டு  உருக: இணைப்பு
https://www.youtube.com/watch?v=4gpqCPYYXnk&hd=1





5 comments: