Thursday, August 28, 2014

ஸ்ரீ கணேச சரணம்

ஸ்ரீ கணேச சரணம்

கணங்களின் தலைவனே




கஷ்டங்களை கண நேரத்தில்
காணாது செய்பவனே

நினைத்த மாத்திரத்தில்
இன்பம் தரும் நிர்மலனே

அன்போடு அளிக்கும்
அருகம்புல்லையும் ஏற்பாய்
அறுசுவையுடன் படைக்கும்
மோதகங்களையும் ஏற்பாய்

அரசமரத்தடியில் ஏகாந்தமாய்
வீற்றிருப்பாய் ,ஆலயத்திலும்
அனைத்து   பரிவார தேவதைகளுடனும்
கோயில் கொண்டு அருள் செய்வாய்.

வேதத்தின் உட்பொருளே
பேதமில்லா பரம்பொருளே
ஞானமில்லா இச்சிறியேனையும்
ஆதரித்து அருள்வாய்

6 comments:

  1. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் ஸார். ஓவியம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. ஸ்ரீ கணேச சரணம் சரனம் கணேசா..!

    விநாயகசதுர்த்தி வாழ்த்துகள்.!

    ReplyDelete
  3. எல்லாம் வல்ல இறைவனின் அருளால், அய்யாவிற்கும், குடும்பத்தார்க்கும் அனைத்து நலமும் வளமும் பெற்று வாழ பிரார்த்திக்கிறேன்! வாழ்த்துக்கள் அய்யா!

    ReplyDelete