Saturday, December 20, 2014

ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி (21.12.14)

ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி (21.12.14)

வானகத்திலிருந்து கானகத்திற்கு
வந்துதித்த வானர வீரனே




சீதை அன்னையை கவர்ந்து சென்ற
அரக்கனின் கோட்டைக்கே சென்று
அவன் கொட்டத்தை அடக்கிய தீரனே

ஆதவனிடம் ஆகமம் அனைத்தையும்
கற்று தேர்ந்த ஆசானே


இப்பூமியில் வாழும் அனைவரையும்
கரையேற்ற  வேண்டி இஷ்வாகு குலத்தில் 
வந்துதித்த ராமனை எந்நேரமும் இசையால்
துதிக்கும் தூயனே அனுமனே
தஞ்சம் என்று உன் திருவடிகளைப்
பற்றினேன் ,தவறாது அருள்  செய்வாய்.

5 comments:

  1. அழகிய கவிதை..
    அருமையான வேண்டுதல்!..
    ஸ்ரீ ஆஞ்சநேயர் திருவடிகள் சரணம்!..

    ReplyDelete
  2. இப்பூமியில் வாழும் அனைவரையும்
    கரையேற்ற வேண்டி இஷ்வாகு குலத்தில்
    வந்துதித்த ராமனை எந்நேரமும் இசையால்
    துதிக்கும் தூயனே அனுமனே
    தஞ்சம் என்று உன் திருவடிகளைப்
    பற்றினேன் ,தவறாது அருள் செய்வாய்.

    அருமை படங்கள் எல்லாம் அழகு.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete