Saturday, December 6, 2014

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.



மாலையில் இருள் சூழ்ந்தால்
காலையில் கதிரவன் உதயமாகின்றான்
அதை விரட்டிட அனுதினமும்

ஆனால் மனிதர்களின் மனதில்
இருள்  சூழ்ந்தால் அதை
விரட்டுபவர் யார்?

மனதில் சூழ்ந்துவிட்ட இருளை
விரட்ட மாகேசன் ஒருவனைத் தவிர
வேறு யாரால் இயலும்?

இந்த உண்மையை அறிந்த நம் முன்னோர்கள்
காட்டிய வழி ஒளியாய்  விளங்கும்
இறைவனை தரிசித்து வழிபடுவதே

மதங்கள் பலவாயினும் மனிதர்கள்
அனைவருக்கும் ஒளி   ஒன்றே
இந்த உண்மையை  உணர்ந்தோர்
இன்பம் அடைவார்.

 மற்றோர் தானும் துன்பத்திற்கு  ஆளாகி
 இந்த உலகத்தின் அமைதியையும் குலைக்கின்றார்.

அனல் கொதிக்கும் மனமுடையோர் நெஞ்சில்
அன்பு புனல் பாயட்டும் இந்நாளில் அனைத்து
உலக மாந்தரும் அமைதி பெற.

கார்த்திகை தீப நன்னாளில் தீபம் ஏற்றி
வழிபாடு செய்து புறத்தே காணும் ஒளியை
நம் அகத்தே கண்டு ஆனந்தம் பெறுவோம்.

2 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

    இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றியும் வாழ்த்துக்களும் DD

    ReplyDelete