Saturday, December 5, 2015

தவறு செய்தால் தண்டனை உறுதி

தவறு செய்தால் தண்டனை உறுதி

தவறு செய்தால் தண்டனை உறுதி 

ஆம் தவறு செய்தால்
தண்டனை உறுதி

வடிநீர் கால்வாய்களில்
நாள்தோறும் குப்பைகளை கொட்டினோம்.
நீர் செல்லும் வழிகளை அடைத்தோம்.

அதனால் வேறு வழியின்றி
கால்வாய்களில் செல்லும் நீர்
வீதிக்கு வந்தது .அப்படியே நம்
வீட்டிற்குள்ளும் புகுந்தது

வீட்டை நரகமாக்கி நாறடித்தது
இனி அவ்வாறு செய்யமாட்டோம் என்று
உறுதி எடுத்துக்கொள்வோமா ?

பயிர் நிலங்கள் நம்மை வாழ  வைக்கும்
உயிர் நிலங்கள் அதில் வீட்டைக்
கட்டினோம் அந்தோ ! இன்று நீர்
சூழ்ந்து கூழ் கூட கிடைக்காமல்
கதறுகின்றோம் -அரசைக் குறை
கூறி  என்ன பயன்?

ஏரி ,குளம், குட்டை எல்லாம்
காணாமல் போயிற்று -பெய்யும் மழை நீர்
தங்க இடம் இல்லாமல் போயிற்று

ஆற்று படுகையிலே வில்லாக்கள்
கட்டினோம். இன்று அனைத்தையும்
இழந்து ஒன்றும் இல்லாமல் தவிக்கின்றோம்.

இனியாவது மனிதர்கள் தாங்கள்
செய்யும் தவறுகளை திருத்தி கொள்ளவேண்டும்

இல்லை யெனில் நாமிருக்க மாட்டோம்
இவ்வுலகில் இவைகளைக் காண. 

2 comments:

  1. இலவசமாய் அவன் வழங்கிய அமுத மழை நீரை
    விற்று காசு பார்த்தது சுயநலக் கூட்டம் இதுநாள் வரை

    ஆனால் அந்தோ பரிதாபம் இன்று ஒரு குவளை நீராவது யாராவது
    இலவசமாக தரமாட்டார்களா என்று ஏங்கி தவிக்குது அதே மக்கள் கூட்டம்

    நீர் ஓடும் ஓடைகளில் நீண்ட நெடிய கட்டிடங்கள்

    விளைவு வீதியிலே தேங்கி நிற்கும் வெள்ளநீர் வெளியேற வழியில்லாமல் நிற்குதப்பா

    பீதியிலே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல்
    தங்கி மனம் வெதும்பி ஒன்றும் செய்யமுடியாமல் தவிக்குதப்பா

    இனியாவது தவறு செய்யாதிருப்போம் .இந்த துயரிலிருந்து
    வெளிவர வழி தேடுவோம்.

    மனம் திருந்தினால் துன்பம் தந்த அதே இயற்க்கை
    நாம் நலமாக வாழ வழி வகுத்துக் கொடுக்கும்

    ReplyDelete
  2. இலவசமாய் அவன் வழங்கிய அமுத மழை நீரை
    விற்று காசு பார்த்தது சுயநலக் கூட்டம் இதுநாள் வரை

    ஆனால் அந்தோ பரிதாபம் இன்று ஒரு குவளை நீராவது யாராவது
    இலவசமாக தரமாட்டார்களா என்று ஏங்கி தவிக்குது அதே மக்கள் கூட்டம்

    நீர் ஓடும் ஓடைகளில் நீண்ட நெடிய கட்டிடங்கள்

    விளைவு வீதியிலே தேங்கி நிற்கும் வெள்ளநீர் வெளியேற வழியில்லாமல் நிற்குதப்பா

    பீதியிலே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல்
    தங்கி மனம் வெதும்பி ஒன்றும் செய்யமுடியாமல் தவிக்குதப்பா

    இனியாவது தவறு செய்யாதிருப்போம் .இந்த துயரிலிருந்து
    வெளிவர வழி தேடுவோம்.

    மனம் திருந்தினால் துன்பம் தந்த அதே இயற்க்கை
    நாம் நலமாக வாழ வழி வகுத்துக் கொடுக்கும்

    ReplyDelete