Monday, May 22, 2017

மரணம் ஒரு முடிவல்ல !


மரணம் ஒரு முடிவல்ல !

ஆம் மரணம் ஒரு முடிவல்ல !
அது நம் ஜீவனின் பயணத்தில்
அடுத்த எபிசோடை தொடங்கும் முன்
விடப்படும் இடைவேளை.

பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
மரணம் ஒரு மனிதனின் வாழ்வில் உள்ள
எல்லா பிரச்சினைகளையும்  முடிவுக்கு கொண்டு
வந்து விடும் என்று.

அவன் வாழும் குடும்பம் அல்லது சமூகத்திற்கு
வேண்டுமானாலும்ஒரு தற்காலிக  தீர்வை தரலாம்.

ஆனால் அந்த மனிதனின் அடுத்த பயணம்
வாழ்ந்த காலத்தில் செய்த வினைகளின்
அடிப்படையில்தான்
தொடரும். என்பதே உண்மை.

ஒருவன் வாழ்நாள் முழுவதும்
பிறருக்கு தீமைகளையே செய்து
துன்பம் தந்தவன் அடுத்த பிறவியிலும்
அப்படிதான் அவன் வாழ்வை அமைத்துக் கொண்டு வாழ்வான்.

அதனால்தான். இறப்பதற்குள் ஒவ்வொரு
மனிதனும் தன்னுடைய
தவறுகளை திருத்திக் கொள்ளவேண்டும்.

நல்ல சிந்தனைகளுடன் நல்ல
பயனுடைய வாழ்க்கையை
அமைத்துக்கொண்டால்தான்.
அடுத்த பிறவி நல்லதாக அமையும்.

 அவன் அடுத்த பிறவியில் நல்லவனாக வாழ்ந்தாலும்
 முற்பிறவியில் செய்த தீய வினைகளின் பயனை
அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும் என்ற
விதியை யாரும் மற்ற முடியாது.

நடந்துபோனவை
கடந்து போனவை மீண்டும் வராது.

அதனால் அவைகளை நினைத்து
நிகழ் காலத்தை கோட்டை விடுபவன் முட்டாள்.


இன்று இந்த உலகில் கடந்த கால சம்பவங்களை பற்றி பேசியே வாழ்நாளை வீணாக்கி கொண்டிருக்கும் கூட்டம் பெருகிக். கொண்டிருக்கிறது.

நடந்த தவறுகளை சரி செய்யும் பணிகளில் அவர்கள் இறங்குவதில்லை.
மாறாக அவர்கள் முழு மூச்சுடன் அதை தடுக்கும் வேலையில்தான்  ஈடுபடுகிறார்கள். என்பது நிதரிசனம்

நம் கையில் கணமும் இருப்பது நிகழ் காலம்
அதுவும் இந்த நொடி மட்டும்தான்

அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்பவனே
வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

6 comments:

  1. //மரணம் ஒரு முடிவல்ல !

    ஆம் மரணம் ஒரு முடிவல்ல !
    அது நம் ஜீவனின் பயணத்தில்
    அடுத்த எபிசோடை தொடங்கும் முன்
    விடப்படும் இடைவேளை.//

    சினிமாவில் ’இடைவேளை’ விடப்படும் போது, அவரவர்கள் சேர்ந்தோ பிரிந்தோ போய் தங்களுக்குப் பிடித்த தீனிகளை வாங்கிச் சாப்பிட்டு விட்டு, டீ, காஃபி, ஜூஸ் போன்றவற்றையும் வாங்கிக் குடித்துவிட்டு அமர்வது வழக்கம்.

    அதுபோலவே ஒரு ஜீவன் பிரிந்ததும், முகத்தில் துயரத்துடன் சிலர் அதனுடன் சுடுகாடு வரை சென்று விட்டு, பிறகு குளியல் போட்டுவிட்டு (சிலர் இந்தக் குளியலும் போடாமலேயே) தீனிகள் + டிரிங்ஸ் சாப்பிட்டுவிட்டு, அவரவர் வேலைகளைப் பார்க்கப் போய்விடுகிறார்கள்.

    நன்கு அலசி ஒவ்வொன்றையும் சொல்லியுள்ளீர்கள் ..... மரணம் ஒரு முடிவல்ல ! என்பதை நிலைநாட்ட வேண்டி. பாராட்டுகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மனதில் இன்று அதிகாலை எழுந்த எண்ணங்களை கொட்டிவிட்டேன், அவ்வளவுதான்

      Delete
  2. அற்புதம் நண்பரே நல்ல விடயங்களை அறிந்தேன் நன்றி.

    ReplyDelete
  3. Dear Sri Pattabi,

    When a person dies, we say "he is no more". Actually, it is not true. There is more to come. Since he does not die peacefully and carries all unfulfilled wishes, he will take birth again in an attempt to fulfill his desires. Again he will come to the world, suffer the sorrows, die again and take birth again. It goes on and on until he realizes that he has to gain nothing from this world and until he realizes that he is not the body or mind but the Atman, the Chaitanya that shines in everyone.

    Regards

    Krishnan

    ReplyDelete
  4. Dear Sri.VSK

    Unless and until a jeeva do atma vichaara as per the doctrine of Bagvaan Ramana the journey never ends.

    But this is not possible untill all the stigmas attached to a particular faith is erased from their minds

    A dog like mind wont allow you and with this mind you cannot break the coconut to drink the nectar inside

    TRP

    ReplyDelete