Saturday, September 15, 2012

இறைவனை நான் எங்கே தேடுவேன்?

கேள்வி-எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ள 
இறைவனை நான் எங்கே தேடுவேன்?

பதில்-அவனை வெளியில் தேட வேண்டாம்.
முதலில் அவனை உன்னுள்ளே தேடு.  
உன்னுள்ளே அவனை கண்ட பின் 
அவனை நீ எல்லா இடத்திலும் எல்லா 
உயிரினங்களின் உள்ளும்  காணலாம் 
அப்போதுதான் ஞானிகள் அறிந்து தெளிந்து 
உலகிற்கு அறிவித்தஉபதேசமான 
அனைத்தும் பிரம்ம மயம்  என்ற 
உண்மையை உணரமுடியும் .

அனைத்து நகைகளும் தங்கத்தால் செய்யப்பட்டாலும் 
ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உள்ளதுபோல் 
இந்த பிரபஞ்சத்தில் பிரம்மத்திலிருந்து உண்டான
ஒவ்வொரு பொருளும் ஒரு பெயர் கொண்டு விளங்கும் 

எப்போது அனைத்து நகைகளின் பெயர்களை மறந்து 
அவைகள் அனைத்தும் தங்கம் என்று மனம் பார்க்க 
கற்றுகொள்ளுகிறதோ அப்போதுதான் 
அனைத்து வடிவங்களும் ஒரே பிரம்மத்தின்
 பல்வேறு தோற்றங்கள் என்று மனம் உணர முடியும்.

பேதங்கள் நீங்கிடின் விருப்பும் இல்லை வெறுப்பும் இல்லை
இரண்டும் இல்லையேல் என்றும் இன்பந்தான் இவ்வுலகில்.  

1 comment:

  1. சுருக்கமான விளக்கம் என்றாலும், மனதில் உடனே பதிந்து விடுகிறது... அருமை...

    ReplyDelete