Wednesday, October 30, 2013

காலத்தை வென்ற கணநாதா!

காலத்தை வென்ற கணநாதா!






















ஸ்ரீ வித்யாரண்யர் என்ற
மகானின் ஆசியுடன் விஜயநகர
சாம்ராஜ்யம் தோன்றியது.



செல்வ
செழிப்போடு விளங்கியது.

சாநாதன  மதம் தளிர்த்து,
தழைத்து வளர்ந்தது.

ஆயிரக்கணக்கான கோயில்கள் கட்டப்பட்டன
.ஒவ்வொரும் கற்பனை செய்து பார்க்க முடியாத
அளவிற்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டன.





விஜயநகர சாம்ராஜ்யத்தில் வைரமும் ,
 வைடூரியமும் மற்றும் தங்கம்
தெருவில் கூறு கூறாக
 கட்டி விற்கப்பட்டது
என்று சொல்வார்கள்.

வெளிநாட்டு வர்த்தகர்கள்
இங்கு வியாபாரம்
செய்ய வந்தார்கள்.
செல்வ  செழிப்பை கண்டார்கள்
பொறாமை கொண்டார்கள்
போர் தொடுத்தார்கள் .
எல்லா செல்வங்களும் கொள்ளை
போய்விட்டது.





கலைகளும், பக்தியும்
நிறைந்து  விளங்கிய
பொற்காலம் விஜயநகர
சாம்ராஜ்யத்தை கட்டிக்
காத்த கிருஷ்ணதேவராயர்.





ஆனால் இந்த உலகில்
 எதுவும் நிரந்தரம் அல்லவே .

எல்லாவற்றிற்கும்
அழியும் நேரம் உண்டு




அதுபோல்தான் கலா ரசனையற்ற
கொள்ளையர்களால் ஈவு இரக்கமின்றி
அனைத்தும் அழித்து நொறுக்கப்பட்டன.

அப்படி இருந்தும் அந்த மன்னர்கள்
அமைத்த கோயில்களின் இடிபாடுகள்
இன்னும் கம்பீரமாக
அதே எழிலுடன் மிளிர்கின்றன.

ஹம்பியில் இன்னும்
கணேசப் பெருமானின் கண் கவர் வடிவம்
இன்னும் அதே எழிலுடன் வீற்றிருக்கிறதை
கண்டு வணங்கி மகிழ்வோம்.

pic.courtesy-google images


4 comments:

  1. // ஆனால் இந்த உலகில் எதுவும் நிரந்தரம் அல்ல //

    சத்தியமான உண்மை ஐயா... சிறப்பான தகவலுக்கு நன்றி ஐயா...

    இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி DD
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
      உள்ளம் கனிந்த ஒளிநாள் வாழ்த்துக்கள்.

      Delete
  2. //அப்படி இருந்தும் அந்த மன்னர்கள் அமைத்த கோயில்களின் இடிபாடுகள் இன்னும் கம்பீரமாக அதே எழிலுடன் மிளிர்கின்றன.//

    காலத்தால் அழியாத காவியங்கள், கலைகள், ஓவியங்கள், இன்றும் ஆங்காங்கே காண முடிவதே அவற்றின் தனிச்சிறப்புகள் தான்.

    // ஆனால் இந்த உலகில் எதுவும் நிரந்தரம் அல்ல //

    மிகச்சரியானதோர் வார்த்தை தான். பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் VGK

    ReplyDelete