Saturday, April 5, 2014

குருவாயூரப்பா அருள் தருவாய் நீயப்பா!

குருவாயூரப்பா 
அருள் தருவாய் நீயப்பா!



உன் கோயிலிலே என்றும்
திருநாள்தானப்பா !

உலகம் என்னும் தேரினையே
ஓடச் செய்யும் சாரதியே

காலம் என்னும் சக்கரமே
உன் கையில் சுழலும் அற்புதமே!

அனைத்தையும் மறந்தேன்
உன் வடிவழகைக் கண்டவுடன்


ஆசைகள் அகன்றன
மன ஓசைகள் அடங்கின
உள்ளம் முழுவதும் நிறைந்தது
ஆனந்தமும்  அமைதியும்
பெற்றேன் உன் தரிசனத்தால்.

1 comment: