Thursday, August 13, 2015

அலர்மேல் மங்கையே

அலர்மேல் மங்கையே 


அலர்மேல் மங்கையே
அகிலத்தை ஆளும் அரசியே



ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


அன்புடன்  அகத்தில்
நினைப்போர்தன்னை
பரிவோடு  காக்கும்
அன்னையே

எட்டெழுத்து மந்திரத்தில்
எட்டெழுத்தாய் இருந்து கொண்டு
எல்லோரையும் காப்பவளே



                                                  ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 



ஒளி வீசும்
திருமுகம் கொண்டவளே
வணங்குவோர்  வாழ்வில்
ஒளி தீபம் ஏற்றுபவளே

என்றும் மறவேன்
உன் திருநாமம்
என் கண்களை விட்டு
என்றும் அகலாது
உன் திருவடிவம்.

2 comments:

  1. மழையாய் உன் கருணையைப் பொழிய வைப்பாய் அம்மா...

    ReplyDelete
  2. நீங்கள் உங்கள் மனம் என்னும்
    பாத்திரத்தை காலி செய்து சுத்தமாக வைத்திருங்கள்.
    அப்போது அருள் மழை பொழியும் தன்னாலே.

    ReplyDelete