Sunday, August 16, 2015

திரு ஆடி பூரம்

திரு ஆடி பூரம் 


Image result for sri andal


ஆடி பூரம் தன்னில்
அவதரித்த  கோதை

கண்ணனையே நினைந்து
நினைத்து அவனுடன்
கலந்துவிட்ட பேதை

இனிமையான முப்பது பாக்களில்
முப்பது முக்கோடி தேவர்களும்
வணங்கும் முகுந்தனின் அருளைப்
பெற பாதை  வகுத்து தந்த மேதை

வேதத்தின் உட் பொருளை
விளையாட்டாய் பாடி அறிந்து இன்புற
பாக்களாய்  தந்தாள் பாவை ஆண்டாள்
திருப்பாவை என்னும் நூலாக

அரங்கனுடன்
கலந்துவிட்ட பக்தை   அவள்
அடியவர்களின் துயர் துடைக்கும்
அன்னையும் அவளே. அவளை
நினைத்து வணங்குவோம்  இந்நாளில்.



1 comment: