Thursday, April 21, 2016

கூடு விட்டு கூடு பாயும் வித்தை

கூடு விட்டு கூடு பாயும் வித்தை 

சித்தர்களும் யோகிகளும் கூடு விட்டு

கூடு பாயும் வித்தை நிகழ்த்தி காட்டியதாக

கேள்விபட்டிருக்கிறோம்.



அருணகிரிநாதர். கிளி உடலில் புகுந்து

தேவ லோகம் சென்று வந்ததாகவும்

அவர் மீண்டும் மனித உடலில் புகுவதற்க்குள்

அந்த உடலை அவர் எதிரிகள் அழித்துவிட்டதாகவும்.அதனால்

அவர் கிளி உடலிலேயே தங்கி பிறகு இறைவனுடன்

கலந்துவிட்டதாக அறிகிறோம்.


ஆதி சங்கரர்  சரிதத்திலும் இதுபோன்ற நிகழ்வு

நடந்துள்ளது அனைவருக்கும் தெரியும்.


சுய நினைவுடன் தான் குடியிருந்த உடலிருந்து வேறு

உடலுக்குள் புகுந்து மீண்டும் வருவது அனைவருக்கும்

சாத்தியமில்லை


ஆனால் சுயநினைவின்றி மரணம் என்ற நிகழ்வின் மூலம்

ஒரு உடலிலிருந்து மற்ற உடலுக்கு  தொடர்ந்து முடிவில்லாது

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும்

பயணம்  செய்துகொண்டிருக்கிறது  என்பதை நாம் அறியாமல்

இருந்துகொண்டிருக்கிறோம்.


புல்லிலிருந்து நம் பயணம் தொடர்துகொண்டிருக்கிறது.


அந்த பயணத்தை நாம் முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென்றால்

மனித உடலில் இருக்கும்போதுதான் அதற்க்கான முயற்சியை

நாம் செய்ய முடியும்


நமக்கு அந்த அரிய  நல் வாய்ப்பை இறைவன் அளித்துள்ளான்.

அந்த அரிய  வாய்ப்பை  பயன்படுத்திக்கொண்டு அதற்க்கான

முயற்சிகளை மேற்கொண்டு  நாம் அனைவரும்

இந்த முடிவில்லா பயணத்திற்கு  முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

நமக்கு பிறவியைத் தந்த இறைவனே
அதற்குமுற்றுபுள்ளி வைப்பவனாகவும்  திகழ்கின்றான்

அவன் திருவடிவை நினைந்து அவன் திருவடியை நாடி

பக்தி செய்து பலமும் பலனும்  அடைவோமாக 

No comments:

Post a Comment