Wednesday, April 27, 2016

ஒரு கண நேரமும் உன்னை மறவேன்

ஒரு கண  நேரமும் உன்னை மறவேன் 

ஒரு கண  நேரமும் உன்னை மறவேன்
நான்மறைகள் போற்றும் நாரணனே
என் உள்ளத்தில் வாசம் செய்யும்
வாசுதேவ பெருமானே

நொடிக்கு ஆயிரம் எண்ணங்கள் என்
மனதில் தோன்றிடினும் துடிக்கும்
என் இதயம் என்றும் மறவாது உன்
இனிய திருநாமம்தன்னை

கண்ணை மூடினால் காணமல்
போய்விடும் மண்ணும் விண்ணும்
கருத்தில் உன்னை வைத்தால்
மண்ணிலும் விண்ணிலும் உன்
திரு காட்சிதான் தோன்றும்

உறக்கத்தில் உன்னை நான் மறந்தாலும்
உறங்காது நீ உன் பக்தர்களைக் காக்கும்
குணம் கொண்டவனே

மணம் வீசும் மலர் மாலைகள்  சூடியவனே
அலர்மேல் மங்கை உறையும் மார்பனே
அன்பின்  பிறப்பிடமே ஆனந்தத்தின் உறைவிடமே
என்றும் உன் திருநாமம் என் நாவில் நடமிட
வரமருள்வாய்



No comments:

Post a Comment