Tuesday, October 1, 2013

ஆன்ம விடுதலைக்கு உதவும் ராமநாமம்

காந்தியைப் போல் 

காந்தியைப் போல்
ஒரு சாந்த ஸ்வரூபனை
இனி காண்பது எளிதாமோ



மகாத்மா காந்தியைப் போல்
ஒரு சாந்த ஸ்வரூபனை
இந்த பூமியில் காண்பது எளிதாமோ

சாந்தி நிலவ வேண்டும் ,
உலகில் சாந்தி நிலவ வேண்டும்
மகாத்மா காந்தியின் கட்டளை அதுவே

அழியும் மனிதர்களை ஆண்டவனிடம்
பிரார்த்தனை செய்ய சொல்லி அஞ்சி பயந்து
நடுங்கி கொண்டிருந்த மக்களை திறந்த மார்புடன்
அந்நியனை நிராயுதபாணியாக எதிர்த்து
போராட வைக்க யாரால் இயலும்?

சத்தியமாக
அது யாராலும் முடியாது
சத்தியத்தை கடைபிடித்த சத்தியமூர்த்தி




அஹிம்சையே மூச்சாகக் கொண்ட அஹிம்சாமூர்த்தி
மகாத்மா காந்தி ஒருவரால்தான் முடியும்.
முடிந்தது.

ஆன்ம விடுதலைக்கு உதவும் ராமநாமம்
நாட்டை அந்நியர்களின் அடிமைத்தளையிலிருந்து
விடுவிக்கவும் உதவும் என்று இந்த
உலக மக்களுக்கு உணர்த்தியவர்.



ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன  சீதாராம். என்று தானும் பாடி
அனைவரையும் பாடவைத்தவ்ர்



அதன் ஆற்றலால் உடைந்து சிதறிப் போன
 நம் நாட்டை ஓட்ட வைத்தவர்.



வெள்ளையர்கள் என்னும் கொள்ளையர்களை
 நம் நாட்டை விட்டு ஓட வைத்தவர்.

சுதந்திரம் பெற்றுத் தந்தார் நாட்டிற்கு
அவர் பெற்றுத் தந்த  சுதந்திரத்தை
தந்திரமாக மக்களிடமிருந்து பறித்துக்கொண்டனர்
இன்று சுயநல தேச துரோக கூட்டம்.

நீ இருந்தால் அது நடக்காது என்று
உன்னை வானுலகிற்கு
அனுப்பிவிட்டனர்.



அன்று தெய்வங்கள் இவ்வுலகிற்கு
அவதாரம் எடுத்து வந்தது அப்பாவி
மக்களின் துயர்  போக்க

சில இங்கேயே சிலையாய்
நின்று வழிபடுவோரை
காத்து நிற்கின்றன




நீயும் சிலையாய் நிற்கின்றாய்



ரூபாய் நோட்டுக்களில் தோன்றி எல்லா
மனிதர்களுடன் உறவாடுகின்றாய்.

ஆனால் என்ன செய்ய?

இறைவன் உள்ளிருந்தும் அதை 
அறிய இயலா மூடர்கள் இந்த மனித குலம்  

உன்னை அறியவில்லை 
உன் அறிவுரைகளை
ஏற்கவில்லை .
அல்லபடுகிறது 
அனுதினமும். 

இருந்தும் உன்னை வேண்டுகிறேன்.
மீண்டும் நீ வா

இவ்வுலகிற்கு .குண்டுகள்
துளைக்க முடியாத கவசத்துடன்.

சாதிக்கு முடிவு கட்ட
வீணர்களை நாட்டை விட்டு விரட்டிட

லஞ்சமும் வஞ்சமும் மக்கள்
மனதை விட்டு அகல

பஞ்சமும் நோயும்
நம் நாட்டிலிருந்து ஒழிய

மதமொழிந்து
அன்பால் அனைவரும் இணைய





நீ வா ,உடனே வா,



இப்போது உன் பணி  மிகவும்
எளிது. இணைய தளம் உள்ளது.
இருக்கும் இடத்திலிருந்தே
இவ்வுலகை மாற்றலாம்

5 comments:

  1. வரிகளில் சில உண்மைகள்... முடிவில் சொன்னது நடக்க வேண்டும்... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்... பறப்பதற்கு தயாராக இருங்கள்...!

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

    ReplyDelete
  2. சாந்தி நிலவ வேண்டும் ,
    உலகில் சாந்தி நிலவ வேண்டும்

    காந்தி மீண்டும் அவதரிக்கட்டும் ...
    ராம நாமத்துடன் ...

    இணைய தளம் கொண்டு
    இருக்கும் இடத்திலிருந்தே
    இவ்வுலகை மாற்றட்டும் ..!

    ReplyDelete
  3. சாந்தி நிலவ வேண்டும் , உலகில் சாந்தி நிலவ வேண்டும்

    அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

    ராம் ராம் ராம் ராம் ராம் ராம்!
    ராம் ராம் ராம் ராம் ராம் ராம்!

    ராமஜயம் ஸ்ரீ ராமஜயம்
    நம்பிய பேருக்கு ஏது பயம் !

    ராம் ராம் ராம் ராம் ராம் ராம்!
    ராம் ராம் ராம் ராம் ராம் ராம்!

    ReplyDelete