Wednesday, October 16, 2013

கண்ணா காத்தருள்!

கண்ணா காத்தருள்!








கருவறையில்
காரிருளில் கிடந்தேன்

உள்ளத்தில் ஒளியாய்
 நீ புகுந்தபின்
உலகத்தில் என்ன
உலவ விட்டாய்

கண்ணிலே
ஒளியாய் இருந்து
கவினுலகைக்
காணச் செய்தாய்

ஓங்காரத்தின்
விரிவாய் விளங்கும்
இன்னிசை ஒலிகளைக்
கேட்க செய்தாய்.

என்னை சுற்றியுள்ளவைகளை
அறிந்து கொள்ளும்
அறிவைத் தந்தாய்

அனைத்திற்கும்
சாரமான உன்னையோ
நீ மறைத்துக்கொண்டாய்
நான் அறியாது.

நான்மறைகளும்
உன்னை நாடி அருள் பெற்ற
அருளாளர்களும் உன்
பெருமை உரைத்ததை
கேட்டும் அதை உணராது
உலக மோகத்தில்
மூழ்கியதே
இவன் உள்ளம்.

ஓம்காரப் பொருளை
நாடாது உள்ளத்தில்
அகம்காரம்  மிகக் கொண்டு
அல்லல்பட்டேன்
அவனியில் அங்கும்
இங்கும் அலைந்து

கண்ணா அழகே
வடிவான உன்னை
கண்டேன்

உன் அடி தொழுது
உன்  நாமம் பாடி
மயக்கம் தெளிந்தேன்.
இன்பம் பெற்றேன்.

நான் பெற்ற இன்பம்
பெறுக  இவ்வையகம்
என்று நினைந்தே
அனைவருக்கும்
அறிய பகிர்கின்றேன்

உண்மையை உணர்ந்தே
உய்யட்டும் என்று.

கண்ணா காத்தருள்!

6 comments:

  1. நாங்களும் இன்பத்தை பெற்றோம் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கண்ணா காத்தருள்!

    அண்ணா அருமை !!

    ReplyDelete
  3. மீண்டும் மீண்டும் காட்சியளிக்கும் இந்தப் படமும் அருமை அண்ணா.

    ReplyDelete
  4. Replies
    1. நிச்சயம் அருளுவான்.அவன் கருணைக் கடலாயிற்றே!

      Delete