Friday, October 25, 2013

கருமை நிற கண்ணா ! கார்மேக வண்ணா !

கருமை நிற கண்ணா !
கார்மேக வண்ணா !
























குருவாயூரில் உறைபவனே
குழந்தை வடிவாய் நின்றவனே

வாதப் பிணியை நீக்கும்
வாதபுராதினாதனே

வாதம் செய்வோரின்
மனதிற்கு எட்டாதவனே

எட்டாப் பொருளாகிய நீ
உன் எட்டெழுத்து மந்திரம்
ஜபித்தால் வசமாவாய்

கல்விகற்று கர்வம் கொண்டோர்
கண்களுக்கு காண இயலாத கண்ணா
உன் பாதமே கதி என்றிருப்போருக்கு
என்றும் காட்சி தந்திடுவாய்

கருமை நிற வண்ணனே
கருணை உள்ளம் கொண்டவனே
உன்னை மறவாது இருந்தால்போதும்
மீண்டும் பிறவாது செய்யும்
அருள் செய்யும் யாதவகுல திலகமே


5 comments:

  1. கருமை நிற கண்ணா ! கார்மேக வண்ணா !

    பாடல் மிகவும் அருமை அண்ணா !

    //எட்டாப் பொருளாகிய நீ
    உன் எட்டெழுத்து மந்திரம்
    ஜபித்தால் வசமாவாய்//

    ஜபித்து விட்டேன் அண்ணா, வசமாகியிருந்தீர்களானால், என் வசம் வாருங்கள், ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா தரிஸனத்திற்கு - இன்றைய வெளியீடு தங்களின் நீ....ண்....ட கருத்துரைக்காகக் காத்திருக்கிறது. வாசகர்களும் பக்த கோடிகளும் அண்ணாவின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.

    http://gopu1949.blogspot.in/2013/10/70.html?showComment=1382695134897#c159517055122911878

    அன்புத் தம்பி கோபு

    ReplyDelete
    Replies
    1. இவனை நம்பலாம்
      இவன் தவறாது வருவான். வான் வழியாக

      Delete
  2. குழந்தை குருவாயூரப்பனை தொந்தியுடன் அழகாக வரைந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி VGK
      எல்லாம் கணினியின் உபயம்

      Delete
  3. மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete