Thursday, October 31, 2013

தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

தீப ஒளி  திருநாள் வாழ்த்துக்கள் 





தீபாவளி பற்றிய கதைகள்
ஒரு பக்கம் இருக்கட்டும்.
புராணங்கள் இருக்கட்டும்.

ஒளி இருக்கும் இடத்தில்
இருள் இருக்காது

அறியாமை என்னும் இருள் நீங்கினால்
அறிவில் ஒளி உண்டாகும்
சிந்தனையில் தெளிவு உண்டாகும்.

இறைவன் ஒளியாய் இருக்கின்றான்
நம் உள்ளத்தில்
புறத்தே ஆதவனாய் ஒளி வீசி
இந்த அவனியை இயக்குகின்றான்

புறத்தே உள்ள அவனை
அகத்தேயும் கண்டு ஆனந்தம்
அடைய செய்யும் முயற்சிகளே
விளக்கை ஏற்றுதல், வெடிகளை வெடித்து
அதிலிருந்து வெளிப்படும் வண்ண வண்ண ஒளி
சிதறல்களை கண்டு மகிழ்வது.

உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கில்
ஒளியுண்டாகும் என்றான் பாரதி

இந்த நல்ல நாளில் மக்கள் மனதில்
 உள்ள அறியாமை, பொறாமை, கல்லாமை,
பொல்லாமை  போன்ற எதிர்மறை எண்ணங்கள்
விலகி அன்பு ஒளிவிட்டு பிரகாசிக்கட்டும்.

இல்லங்களில் இல்லாமை நீங்கட்டும்.

4 comments:

  1. நல்ல கருத்துக்கள் ஐயா...

    இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //இந்த நல்ல நாளில் மக்கள் மனதில் உள்ள அறியாமை, பொறாமை, கல்லாமை, பொல்லாமை போன்ற எதிர்மறை எண்ணங்கள் விலகி அன்பு ஒளிவிட்டு பிரகாசிக்கட்டும். இல்லங்களில் இல்லாமை நீங்கட்டும்.//

    அருமை, மிக அருமை. அண்ணா சொன்னால் [ஆமைகள் உள்பட] எதுவுமே அருமை தான். பகிர்வுக்கு நன்றிகள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  3. இன்றைய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பதிவுக்கு நாலே நாலு வார்த்தைகளுடன் பின்னூட்டத்தைக் குட்டியூண்டாக நிறுத்திக் கொண்டதில், தங்களின் தீவிர ரஸிகர்களான பலருக்கும் வருத்தமே.

    அண்ணா மீண்டும் வர வேண்டும். கருத்துக்களைப் பஞ்சமில்லாமல் அள்ளித்தர வேண்டும் என்பதே அன்பர்களின் எதிர்பார்ப்பு. வாங்கோ ப்ளீஸ்.

    அன்புடன் கோபு

    ReplyDelete