Tuesday, August 18, 2015

மனித பிறவியின் நோக்கம் என்ன?

மனித பிறவியின் 
நோக்கம் என்ன?

விலங்குகளைப் போல்
உண்டு களித்து
பின்பு களைத்து
உறங்கி மீண்டும் எழுந்து
மீண்டும்...

இதற்கு எதற்கு
மனித பிறவி?

எதற்கோ படித்து
எங்கெங்கோ வேலை செய்து
யாருக்கோ உழைத்து தனக்கென்று
ஒன்றும்  செய்துகொள்ளாமல்
எல்லாவற்றையும் அப்படியே
போட்டது போட்டபடி விட்டுவிட்டு
மாண்டு போவதற்கா மனித பிறவி?

பிறந்தது முதல் அச்சத்திலும்
ஆசைகளிலும், சிக்கி துன்பப்பட்டு
அமைதியில்லாமல் வாழ்ந்து
அழிந்து போவதற்கா மனித பிறவி?

கருவறையிலிருந்து கல்லறைக்கு
போகும் வரையில் ஏதாவது ஒரு
அறையில் கைதி போல் அடிமையாக
வாழ்ந்து மடிவதற்க்கா மனித பிறவி?

விண்ணிலிருந்து மண்ணுக்கும்
மண்ணிலிருந்து விண்ணுக்கும்
ஒவ்வொரு உடலாக புகுந்து
பிறகு வெளியேருவதற்கா மனித பிறவி?

இல்லை இல்லை இல்லை

பின் எதற்கு ?

சிந்தனை செய்யுங்கள். 

3 comments:

  1. சிந்திக்க வேண்டிய சிந்தனை...

    ReplyDelete
  2. முட்களுடன் பிறக்கத் தானே ரோஜா விரும்புகின்றது!..

    ReplyDelete
  3. சிறந்த பகிர்வு


    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete