Wednesday, April 6, 2016

சிக்கலை தீர்க்கும் வழி

சிக்கலை தீர்க்கும் வழி

ஜோதி வடிவானவன் நீ
ஆதி சிவனின் அம்சம் நீ
அவன் பாதி வடிவான ஆதி சக்தியின்
அருள் வாசம் செய்யும் ஆலயமும் நீ

மனம் என்னும் கடலில்
வந்து போகும் ஆசைகள்
ஆயிரமாயிரம்

ஆயிரம் நாமம் கொண்டவனின் வடிவை
அனுதினம் துதித்து வந்தால் அமைதியாய்
அடங்கி விடும்நம்மை ஆட்டுவிக்கும்
எண்ண   ஓசைகள்

வாழ்வின் பொருள் ஓடியோடி
உழைத்து பொருள் சேர்க்க அன்று

அனைத்திற்கும் ஆதாரமாய் விளங்கும்
பரம்பொருளை அறிந்து தெளிந்து
ஆனந்தமாய் வாழ்வதே நன்று

அண்டத்தில் சுற்றி வரும் கோள்கள்
நம் மனதிலும் சுற்றி வரும்
எண்ணங்கள் வடிவில்

அவைகளே  நம் வாழ்வில் தோற்றுவிக்கும்
அனுதினமும் எண்ணிலடங்கா சிக்கல்கள்.

சிக்கலை தீர்க்கும் வழி சிந்தனையை
சீராக வைத்துக்கொள்வதே

போதுமென்ற மனமும் பிறர் மீது
பொல்லாங்கு சொல்லாத குணமும்
அனைத்துயிர்களிடம் அன்பு மாறாது
பணி  செய்யும் பாங்குமே பாரினில்
நல்லதோர் வாழ்வை அளிக்குமே 

1 comment:

  1. அன்புள்ள பட்டாபிராமன் சார், மிகவும் அருமையான சிக்கலை தீர்க்கும், கவிதையை தந்தமைக்கு நன்றி.. கருணை வேண்டி அந்த பரந்தாமன் திருவடிகலை வேண்டுகிறேன் நன்றி வணக்கம் மோகன் ஊரப்பாக்கம்

    ReplyDelete