Wednesday, February 27, 2013

அகிலாண்டேஸ்வரி ரஷமாம் ..


அகிலாண்டேஸ்வரி ரஷமாம்  ..







































திருவானைக்காவில் 
தவம் செய்யும் 
அம்பிகையை 
அவள் பாதம் பணிந்தவர்தம் 
வாழ்வில் பவம் போக்குவாள்.
அவம் நீக்குவாள்.

எம் எஸ் அவர்கள் பாடிய 
அகிலாண்டேஸ்வரி ரஷமாம் என்ற 
முத்துச்வாமி தீஷதரின் கிருதியை 
கேட்கும்போதெல்லாம் மனம் உருகும்

ஆனால் நான் இன்னும் 
அம்பிகையை தரிசிக்கவில்லை.
வாய்ப்பிருந்தும் வசதிகள் இருந்தும்

இருந்தாலும் நான் தரிசிக்காத தெய்வங்களை 
எல்லாம் வரைந்துவிடுவேன் 
வரையும்போதே தெய்வங்களை
தரிசித்துவிடுவேன்

அப்படிதான் சென்ற ஆண்டு ஒரு தீபாவளி மலரில்
அம்பிகையின் படத்தை கண்டேன். 
அன்றே நினைத்தேன் எப்படியாவது 
அம்பிகையின் படத்தை
வரைந்து விடுவதென்று. 


வரைந்தேன்,வண்ணம் தீட்டினேன்.
வந்து புகுந்துகொண்டாள் 
என் இதயத்துள்ளே 

நீங்களும்  தரிசியுங்கள் 

1 comment:

  1. தரிசனம் எங்களுக்கும் கிடைத்தது ஐயா...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete